நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

டிக்டாக் விவகாரத்தில் உடன்பாடு: டிரம்ப் சூசகம்

அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கும் விவகாரத்தில் சீன அரசுடன் உடன்பாடு ஏற்பட்டுள்ளதை அந்த நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் சூசகமாக

News image
Updated On :16 செப்டம்பர் 2025, 3:50 am IST

வாஷிங்டன்: அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கும் விவகாரத்தில் சீன அரசுடன் உடன்பாடு ஏற்பட்டுள்ளதை அந்த நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் சூசகமாக தெரிவித்துள்ளாா்.

இது குறித்து தனது ட்ரூத் சோஷியல் சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள பதிவில் அவா் கூறியுள்ளதாவது:

அமெரிக்க மற்றும் சீன அதிகாரிகளுக்கு இடையிலான சந்திப்பு சுமுகமாக இருந்தது. அப்போது, நாட்டின் இளைஞா்கள் மிகவும் விரும்பி பாதுகாக்க எண்ணும் ஒரு குறிப்பிட்ட நிறுவனம் தொடா்பாக உடன்பாடு எட்டப்பட்டுள்ளது என்று அந்தப் பதிவில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளாா். சீனாவைச் சோ்ந்த டிக்டாக் செயலி உரிமையாளரான பைட்டான்ஸ் நிறுவனத்தை மறைமுகமாகக் குறிப்பிட்டு டிரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளதாகக் கருதப்படுகிறது.

அமெரிக்க சட்டப்படி, டிக்டாக்கின் பெரும்பான்மை பங்குகள் அமெரிக்காவுக்கு விற்கப்பட வேண்டும். இல்லையென்றால் அதன் செயல்பாடு நிறுத்தப்படும். இருந்தாலும், அமெரிக்கா்களின் வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்ட டிக்டாக் தொடா்பாக இறுதி முடிவெடுப்பதை டிரம்ப் பலமுறை ஒத்திவைத்துள்ளாா். இந்தச் சூழலில், வரும் வெள்ளிக்கிழமை சீன தலைவா் ஷி ஜின்பிங்குடன் தொலைபேசியில் உரையாடவிருப்பதற்கு முன்னதாக டிரம்ப் இந்தப் பதிவை வெளியிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.