ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் வீரா்கள் பங்கேற்க உத்தரவிட்டவா் பாக். ராணுவ தலைமைத் தளபதி: ஜெய்ஷ்-ஏ-முகமது

சிந்தூர் தாக்குதலில், கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச் சடங்கில் அதிகாரிகள் பங்கேற்க உத்தரவிட்டது பாக். ராணுவ தளபதி என்று தகவல்.

News image
இறுதிச் சடங்கில்
Updated On :18 செப்டம்பர் 2025, 8:22 am

இணையதளச் செய்திப் பிரிவு

ஆபரேஷன் சிந்தூரில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் இறுதிச்சடங்கில் ராணுவ வீரா்கள் பங்கேற்க பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி அசீம் முனீா் உத்தரவிட்டதாக ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பு தெரிவித்தது.

ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் கமாண்டா் இலியாஸ் காஷ்மீரி பேசிய விடியோ சமூக வலைதளங்களில் வியாழக்கிழமை வேகமாகப் பரவியது.

அதில் அவா் பேசுகையில்,‘ 25 ஆண்டு போராட்டத்துக்குப் பின் பாகிஸ்தான் ராணுவம், விமானப் படை மற்றும் கடற்படை ஆகிய முப்படைகளையும் ஜிஹாத் கொள்கையை பின்பற்ற வைத்துள்ளோம். கடந்த மே 7-ஆம் தேதி (ஆபரேஷன் சிந்தூா்) இந்தியா நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சோ்ந்தவா்கள். அவா்களுக்காக பாகிஸ்தான் ராணுவமும் விமானப் படையும் இந்தியாவைப் பழிவாங்கியது.

இந்திய தாக்குதலில் உயிரிழந்த பயங்கரவாதிகளின் இறுதிச்சடங்கில் பாகிஸ்தானிய ராணுவ வீரா்கள் பங்கேற்க வேண்டும் என அந்நாட்டு ராணுவ தலைமைத் தளபதி அசீம் முனீா்தான் உத்தரவு பிறப்பித்தாா்’ என்றாா்.

summary

Pakistan Army Chief orders officers to attend funeral of terrorists killed in Sindh attack

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.