விமான நிலையங்களில் சைபர் தாக்குதல்: லண்டன் உள்பட முக்கிய நகரங்களில் விமான சேவை பாதிப்பு!

சைபர் தாக்குதலால் விமான சேவை கடுமையாக பாதிப்பு...
விமான நிலையங்களில் சைபர் தாக்குதல்: லண்டன் உள்பட முக்கிய நகரங்களில் விமான சேவை பாதிப்பு!
படம் | ஐஏஎன்எஸ்
Published on
Updated on
1 min read

ஐரோப்பாவில் முக்கிய விமான நிலையங்களில் சைபர் தாக்குதலால் விமான சேவை சனிக்கிழமை(செப். 20) கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

ப்ரஸ்ஸல்ஸ், பெர்லின், லண்டனின் ஹீட்த்ரோ உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்களில் விமான சேவை பாதிப்புக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட விமான நிலையங்களில் பயணிகள் வருகை, புறப்பாடு மற்றும் இதர விமான சேவைகளுக்கு இணையவழியில் சேவையளிக்கும் நிறுவனமான ‘காலின்ஸ் ஏரோஸ்பேஸ்’ தளம் தொழில்நுட்பக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, பயணிகள் விமான நிலையத்தைக் கடந்து உள்ளே அனுப்பப்படும் நடைமுறை தாமதமாகியுள்ளது. இந்தத் தகவலை ஹீட்த்ரோ விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.

தொழில்நுட்பக் கோளாறுக்கு சைபர் தாக்குதலே காரணம் என்றும் சொல்லப்படுகிறது. இதனால், விமான நிலையங்களில் நெடுநேரம் காத்திருக்கும் சூழல் உருவாகியுள்ளதால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளகியுள்ளனர்.

Cyberattack disrupts operations at European airports including Heathrow, Brussels

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com