சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

பாங்காக் சாலையில் ஏற்பட்ட மகா பள்ளம்! புகைப்படங்கள்

சினிமா காட்சி போல பாங்காக் சாலையில் ஏற்பட்ட மகா பள்ளத்தில் வாகனங்கள் விழுந்தன.

News image

பாங்காக் சாலை

Updated On :24 செப்டம்பர் 2025, 2:20 pm IST

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் சாலையில் ஏற்பட்ட மிகப்பெரிய பள்ளத்தில் ஏராளமான வாகனங்கள் விழுந்து மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஹாலிவுட் திரைப்படங்களில் தோன்றும் காட்சி போல, பாங்காக்கில், புதன்கிழமை ஏற்பட்ட இந்த பள்ளம் சுமார் 164 அடி ஆழமும், 900 சதுர மீட்டர் அகலமும் கொண்டதாக உள்ளது. இந்த சம்பவத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

வஜிரா மருத்துவமனை அருகே நேரிட்ட இந்த பள்ளத்தினால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Story image

Sakchai Lalit

பள்ளத்தில் விழுந்த வாகனங்களில் இருந்தவர்களை மீட்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

சாலையில் கழிவுநீர் கால்வாய் பகுதியிலிருந்து தண்ணீர் மேலே எழும்புவதும், பிறகு, அங்கிருந்த மின் கம்பம் உள்ளே இழுக்கப்படுவதும், பிறகு, சாலை உள்வாங்கும் காட்சிகளும் பதிவாகியிருக்கிறது.

சாலை அப்படியே உள்வாங்கி, மிகப்பெரிய பள்ளமாக மாறியிருக்கிறது அவ்விடம். அங்கே சுரங்க ரயில் கட்டமைப்பு இருப்பதும் வெளியே தெரிகிறது. அதன் மீது ஒரே ஒரு கார் மட்டும் பள்ளத்தில் விழாமல் பத்திரமாக நின்று கொண்டிருக்கிறது.

சாலைக்கு அடியில் இருந்த கழிவுநீர் குழாய் அதிகப்படியான அழுத்தத்தால் வெடித்து இந்த சம்பவம் நடந்திருபப்தாகக் கூறப்படுகிறது. அங்கிருக்கும் மருத்துவமனை பாதுகாப்பாக இருப்பதாகவும், காவல்நிலையத்துக்கு ஆபத்து இருப்பதால் அதிலிருந்து அனைவரும் வெளியேற்றப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.