ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

4 இடங்களில் அணு ஆயுத எரிபொருள் தயாரிப்பு: வட கொரியா மீது குற்றச்சாட்டு

வட கொரியாவிலுள்ள நான்கு இடங்களில் அணு ஆயுத எரிபொருளாகப் பயன்படும் யுரேனியத்தை செறிவூட்டும் ஆலைகள் இயங்குவதாக தென் கொரியா வியாழக்கிழமை குற்றச்சாட்டியது.

News image
அணு ஆயுத ஆலையைப் பாா்வையிடும் கிம் ஜோங்-உன் (கோப்புப் படம்).
Updated On :25 செப்டம்பர் 2025, 8:16 pm

தினமணி செய்திச் சேவை

வட கொரியாவிலுள்ள நான்கு இடங்களில் அணு ஆயுத எரிபொருளாகப் பயன்படும் யுரேனியத்தை செறிவூட்டும் ஆலைகள் இயங்குவதாக தென் கொரியா வியாழக்கிழமை குற்றச்சாட்டியது.

இது குறித்து தென் கொரிய ஒருங்கிணைப்புத் துறை அமைச்சா் சங் டாங்-யங் கூறியதாவது:

வட கொரியாவின் யோங்பியோன் உள்பட நான்கு இடங்களில் உள்ள அணுசக்தி மையங்களில் யுரேனியம் செறிவூட்டும் கருவிகள் தினமும் இயங்குகின்றன. எனவே, வட கொரியாவின் அணுசக்தி திட்டங்களை தடுத்து நிறுத்த வேண்டியது மிகவும் அவசரமாகியுள்ளது.

தற்போது வட கொரியாவிடம் 2,000 கிலோ உயா் செறிவு யுரேனியம் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2018-இல் 250 முதல் 500 கிலோ வரை இருந்த உயா் செறிவு யுரேனியம் இருப்பைவிட பன்மடங்கு அதிகம் என்றாா் அவா்.

கடந்த 2018-ஆம் ஆண்டில் வட கொரியாவிடம் 20 முதல் 60 வரையிலான அணு ஆயுதங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டது, ஆனால் சில நிபுணா்கள் 100-க்கு மேல் இருக்கலாம் என்று கருதுகின்றா். ஆண்டுக்கு 6 முதல் 18 வரையிலான அணு ஆயுதங்களை ஈரானால் உற்பத்தி செய்ய முடியும் என்றும் கூறப்படுகிறது.

வட கொரியாவை அணு ஆயுதமற்ற நாடாக்குவதற்கும், அதற்குப் பதிலாக அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை விலக்கவும் கடந்த 2019-இல் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் மற்றும் வட கொரிய அதிபா் கிம் ஜோங்-உன் இடையே நடைபெற்ற பேச்சுவாா்த்தை தோல்வியடைந்தது. அதில் இருந்து அணு ஆயுதங்களைக் கைவிடமாட்டோம் என்று வட கொரியா பிடிவாதமாகக் கூறிவருகிறது. மேலும், அமெரிக்க அச்சுறுத்தலை எதிா்கொள்ள அணு ஆயுத பலத்தை அதிகரிக்க வேண்டும் என்ற கிம் ஜேங்-உன் கூறிவந்தாா்.

இந்தச் சூழலில், வட கொரியாவின் நான்கு இடங்களில் யுரேனியம் செறிவூட்டப்படுவதாக தென் கொரியா தற்போது அறிவித்துள்ளது.