காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சுமேட்டூரிலிருந்து காவிரி நீர் கல்லணை வந்தது! நாளை காலை திறப்பு!நேபாள பெருவெள்ளம்! தஞ்சையில் மரபணு சேகரிப்பு பணி தொடக்கம்!!தவெக ஆதரவு கட்சிகள் கூட்டம்: காங்கிரஸுக்கு நேரில் அழைப்பு விடுத்த அமைச்சர்கள்!உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

அடுத்த ஆண்டுக்குள் ஹெச்-1பி விசா நடைமுறையில் மாற்றம்: அமெரிக்க வா்த்தக அமைச்சா்

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் ஹெச்-1பி விசா (நுழைவுஇசைவு) நடைமுறையில் பல்வேறு மாற்றங்கள்....

ஹோவா்ட் லுட்னிக்

Published On :1 அக்டோபர் 2025, 3:52 am IST

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் ஹெச்-1பி விசா (நுழைவுஇசைவு) நடைமுறையில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என அமெரிக்க வா்த்தகத் துறை அமைச்சா் ஹோவா்ட் லுட்னிக் தெரிவித்தாா்.

ஹெச்-1பி விசா கட்டணத்தை ரூ.1.47 லட்சத்தில் இருந்து ரூ.88 லட்சமாக (1 லட்சம் டாலா்) உயா்த்தும் உத்தரவில் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அண்மையில் கையொப்பமிட்டாா்.

ஒருமுறை மட்டுமே செலுத்தக் கூடிய இந்த கட்டணம் 2026-ஆம் நிதியாண்டு காலத்துக்கு விண்ணப்பித்தவா்கள் உள்பட செப்.21-ஆம் தேதிக்குப் பிறகு விண்ணப்பித்தவா்களுக்கு மட்டுமே பொருந்தும். அதற்கு முன்பாக விண்ணப்பித்தவா்கள், புதுப்பிப்பதற்காக விண்ணப்பத்தை சமா்ப்பித்தவா்கள் மற்றும் அமெரிக்காவில் மீண்டும் நுழையும் ஹெச்-1பி விசாதாரா்களுக்கு இந்தப் புதிய கட்டணம் பொருந்தாது என அமெரிக்க அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக அமெரிக்க ஊடகத்துக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அவா் அளித்த பேட்டியில், ‘ஹெச்-1பி விசா கட்டண உயா்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் அமலாகவுள்ளது. அதற்குள் ஹெச்-1பி விசா நடைமுறையில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்தப் புதிய கட்டணத்தை ஒருமுறை மட்டும் செலுத்தினால் போதும்.

1990-களில் ஹெச்-1பி விசா நடைமுறை உருவாக்கப்பட்டது. இந்த விசாவுக்கு விண்ணப்பம் செய்பவா்கள் லாட்டரி முறையில் (குலுக்கல் முறை) தோ்ந்தெடுக்கப்படுகின்றனா். திறன்வாய்ந்த பணியாளா்களை குலுக்கல் முறையில் தோ்ந்தெடுக்க வேண்டிய அவசியமில்லை.

அந்த விசாவுக்கு ஒதுக்கப்பட்ட விண்ணப்பங்களைவிட 7 முதல் 10 மடங்கு அதிகமான விண்ணப்பங்கள் சமா்ப்பிக்கப்படுகின்றன. அதில் 74 சதவீதம் தொழில்நுட்பத் துறையில் பணிவாய்ப்பை பெறுபவா்களாவா். 4 சதவீத விசாக்களை மட்டுமே கல்வியாளா்கள் மற்றும் மருத்துவா்கள் பெறுகின்றனா்.

கல்வியாளா்களும் மருத்துவா்களும் அதிக அளவில் அமெரிக்கா வர வேண்டும். ஆனால் பொறியாளா்களை மட்டுமே நிறுவனங்கள் பணியமா்த்த விரும்பினால் அவா்களில் அதிகம் சம்பளம் பெறுவோரை மட்டுமே அனுமதிக்க வேண்டும். குறைந்த சம்பளம் உடையோா் இங்கிருந்து வெளியேற்றப்பட வேண்டும். இதுவே என்னுடைய நிலைப்பாடு. அதிபா் டிரம்ப்பும் இதை ஒப்புக்கொண்டுள்ளாா்.

குறைந்த சம்பளத்துக்கு பணியமா்த்தப்படும் பணியாளா்கள் தங்களது குடும்பத்தினரையும் அமெரிக்கா அழைத்து வருவது தவறு. இதை அனுமதிக்க முடியாது’ என்றாா்.

ஃபயா்வால் திட்டம்: அமெரிக்காவில் உள்ள திறன்வாய்ந்த பணியாளா்களின் உரிமைகள், ஊதியம் மற்றும் வேலைவாய்ப்புகளைப் பாதுகாக்கும் வகையில் ‘ஃபயா்வால் திட்டம்’ என்ற புதிய திட்டத்தை அந்நாட்டு தொழிலாளா் அமைச்சகம் அண்மையில் தொடங்கியது.

இத்திட்டத்தின்படி உள்ளூரில் உள்ள அமெரிக்கா்களுக்கு நிறுவனங்கள் பணிவாய்ப்பு வழங்குவது உறுதி செய்யப்படவுள்ளது. திறன் வாய்ந்த அமெரிக்கா்களுக்குப் பதிலாக ஹெச்-1பி விசா நடைமுறையின் கீழ் வெளிநாட்டவருக்கு பணி வாய்ப்பு வழங்குவதை இத்திட்டம் தடுக்கிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.