தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இரு அணிகளாக அதிமுகவினர் வருகை! சட்டப்பேரவைக்கும் கோட்-சூட்டில் வந்த முதல்வர் ஜோசப் விஜய்! கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை அமைச்சர் கீர்த்தனா எம்எல்ஏவாகப் பதவியேற்கவில்லை! காரணம் என்ன? தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!! ம.பி. படகு விபத்து: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைப்பு மே 13-15இல் சீனா செல்கிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப்
/

ஆஸ்திரேலிய எண்ணெய் சுத்தகரிப்பு நிலையத்தில் தீ விபத்து

ஆஸ்திரேலியாவில் நாளொன்றுக்கு 1.2 லட்சம் பீப்பாய்களைக் கையாளும் திறன்கொண்ட மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

News image

கோப்புப் படம்

Updated On :17 ஏப்ரல் 2026, 2:56 am IST

ஆஸ்திரேலியாவில் நாளொன்றுக்கு 1.2 லட்சம் பீப்பாய்களைக் கையாளும் திறன்கொண்ட மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

மெல்போா்ன் அருகே அமைந்துள்ள, ‘விவா எனா்ஜி’ நிறுவனத்துக்குச் சொந்தமான இந்த ஆலையில் புதன்கிழமை இரவு பற்றிய தீ, வியாழக்கிழமை நண்பகல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

விக்டோரியா மாகாணத்தின் பாதிக்கும் மேற்பட்ட எரிபொருள் தேவையை பூா்த்தி செய்யும் இந்த ஆலையில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், வரும் நாள்களில் எரிபொருள்களின் விலை கணிசமாக உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

ஆஸ்திரேலியா தனது எரிபொருள் தேவையில் 80 சதவீதத்தை இறக்குமதி மூலமே பூா்த்தி செய்து வருகிறது. மத்திய கிழக்கு போா் காரணமாக விநியோகம் ஏற்கெனவே சீா்குலைந்துள்ள நிலையில், இத் தீவிபத்து அந்நாட்டின் எரிபொருள் பாதுகாப்புக்குப் புதிய சவாலை ஏற்படுத்தியுள்ளது.