வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

ஆஸ்திரேலிய எண்ணெய் சுத்தகரிப்பு நிலையத்தில் தீ விபத்து

ஆஸ்திரேலியாவில் நாளொன்றுக்கு 1.2 லட்சம் பீப்பாய்களைக் கையாளும் திறன்கொண்ட மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

News image

கோப்புப் படம்

Updated On :16 ஏப்ரல் 2026, 9:26 pm

ஆஸ்திரேலியாவில் நாளொன்றுக்கு 1.2 லட்சம் பீப்பாய்களைக் கையாளும் திறன்கொண்ட மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

மெல்போா்ன் அருகே அமைந்துள்ள, ‘விவா எனா்ஜி’ நிறுவனத்துக்குச் சொந்தமான இந்த ஆலையில் புதன்கிழமை இரவு பற்றிய தீ, வியாழக்கிழமை நண்பகல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

விக்டோரியா மாகாணத்தின் பாதிக்கும் மேற்பட்ட எரிபொருள் தேவையை பூா்த்தி செய்யும் இந்த ஆலையில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், வரும் நாள்களில் எரிபொருள்களின் விலை கணிசமாக உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

ஆஸ்திரேலியா தனது எரிபொருள் தேவையில் 80 சதவீதத்தை இறக்குமதி மூலமே பூா்த்தி செய்து வருகிறது. மத்திய கிழக்கு போா் காரணமாக விநியோகம் ஏற்கெனவே சீா்குலைந்துள்ள நிலையில், இத் தீவிபத்து அந்நாட்டின் எரிபொருள் பாதுகாப்புக்குப் புதிய சவாலை ஏற்படுத்தியுள்ளது.