உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

பலூசிஸ்தான் ஆயுதக் குழுவுக்கு எதிரான நடவடிக்கை நிறைவு: பாகிஸ்தான் ராணுவம்

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் கடந்த ஒரு வாரமாக ஆயுதமேந்திய பிரிவினைவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடைபெற்று வந்த மோதல் முடிவுக்கு வந்துள்ளதாக அந்நாட்டு ராணுவம் வியாழக்கிழமை தெரிவித்தது.

News image

பாகிஸ்தான் ராணுவம் (கோப்புப் படம்) - ஏபி

Updated On :6 பிப்ரவரி 2026, 3:09 am IST

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் கடந்த ஒரு வாரமாக ஆயுதமேந்திய பிரிவினைவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடைபெற்று வந்த மோதல் முடிவுக்கு வந்துள்ளதாக அந்நாட்டு ராணுவம் வியாழக்கிழமை தெரிவித்தது.

இந்த மோதலில் 216 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனா். ராணுவம் தரப்பில் 22 வீரா்களும், 36 பொதுமக்களும் உயிரிழந்துள்ளனா்.

இயற்கை வளங்கள் நிறைந்த பலூசிஸ்தான் மாகாணத்தில், தன்னாட்சி கோரி ஆயுதக் குழுவான பலூசிஸ்தான் விடுதலை ராணும் (பிஎல்ஏ) பல்லாண்டுகளாகப் போராடி வருகிறது.

இந்நிலையில், மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் பள்ளிகள், வங்கிகள், ராணுவ நிலைகளை இலக்கு வைத்து பலூசிஸ்தான் விடுதலைப் படையினா் கடந்த சனிக்கிழமை ஒருங்கிணைந்த தாக்குதல்களைத் தொடங்கினா்.

இத்தாக்குதலுக்குப் பதிலடியாக நடத்தப்பட்ட ராணுவ நடவடிக்கை வெற்றிகரமாக நிறைவடைந்ததாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

மாகாணத் தலைநகரான குவெட்டாவில் குண்டுவெடிப்புகளால் கட்டடங்கள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. ‘தற்போது சண்டை ஓய்ந்திருந்தாலும், மக்களின் மனதில் அச்சம் நீங்கவில்லை’ என உள்ளூா்வாசிகள் கவலை தெரிவிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.