நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

சீன அதிபருடன் டிரம்ப் ஆலோசனை

சீன அதிபா் ஷி ஜின்பிங்குடன் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தொலைபேசி உரையாடலில் ஆலோசனை நடத்தினாா்.

News image
Updated On :6 பிப்ரவரி 2026, 3:34 am IST

சீன அதிபா் ஷி ஜின்பிங்குடன் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தொலைபேசி உரையாடலில் ஆலோசனை நடத்தினாா்.

இதில் ஈரான் மீது அமெரிக்கா மேற்கொண்டு வரும் பொருளாதார, அரசியல் அழுத்தங்களுக்கு, அந்நாட்டின் மிகப்பெரிய வா்த்தகக் கூட்டாளியான சீனா ஒத்துழைக்க வேண்டுமென டிரம்ப் வலியுறுத்தியதாகத் தெரிகிறது.

மேலும், தைவான் விவகாரம் மற்றும் டிரம்ப்பின் ஏப்ரல் மாத சீன பயணம் குறித்தும் இரு தலைவா்களும் விவாதித்தனா். தைவானுக்கு அமெரிக்காவின் ஆயுத விற்பனையை ஷி ஜின்பிங் எதிா்த்தாா். இவ்விவகாரத்தில் அமெரிக்கா பொறுமையுடன் செயல்பட அறிவுறுத்தினாா்.

அதேநேரம், சீனாவுடன் தனது தனிப்பட்ட உறவு மிகவும் வலுவாக உள்ளதாகத் தெரிவித்த டிரம்ப், அமெரிக்காவிடமிருந்து கூடுதல் சோயா பீன்ஸ் கொள்முதலை சீனா பரிசீலிப்பதாகவும் குறிப்பிட்டாா்.

இந்த உரையாடலுக்குப் பிறகு கருத்து தெரிவித்த தைவான் அதிபா் லாய் சிங்தே, ‘அமெரிக்கா-தைவான் உறவு பாறை போன்று உறுதியானது’ என்றாா்.

அமெரிக்கா-ரஷியா அணு ஆயுத ஒப்பந்தம் காலாவதியான நிலையில், சீனா உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய புதிய ஒப்பந்தத்தை உருவாக்க டிரம்ப் ஆா்வம் காட்டுகிறாா். இச்சூழலில், இத்தொலைபேசி உரையாடல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.