நேபாளத்தில் மர்ம பொருள் வெடித்து 4 சிறுவர்கள் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேபாளத்தின் சப்தரி மாவட்டத்தில் உள்ள துதைலா நதி அருகே சனிக்கிழமை 4 சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது மர்ம பொருள் வெடித்ததில் அவர்கள் 4 பேரும் காயமடைந்தனர். சிறுவர்கள் சுற்றுலா சென்றிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.
இதுகுறித்து துணை காவல் கண்காணிப்பாளர் தம்பர் பகதூர் பூரி கூறுகையில், வனப்பகுதியில் பட்டாசுக்கு பயன்படுத்தப்படும் ராக்கெட் போன்ற ஒரு பொருளை அவர்கள் கண்டுபிடித்தனர். அதை அவர்கள் எடுத்தபோது வெடித்துள்ளது.
காயமடைந்த சிறுவர்கள் ரூபனியில் உள்ள மாதேஷ் மாகாண மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் நிலை ஆபத்தில் இல்லை. இவ்வாறு குறிப்பிட்டார். இதனிடையே இந்த சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடத்தி வருவதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
Summary
Four children were seriously injured on Saturday when an unidentified object they were playing with exploded in Nepal's Madhesh province, police said.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நேபாளம்: பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்ததில் 8 பேர் பலி

இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசு

இந்தியாவிலிருந்து மாம்பழ இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள்: நேபாளம்

நேபாளம்: 2.12 லட்சம் கோடி ரூபாயில் நடப்பாண்டு பட்ஜெட் தாக்கல்
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK




