6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஷியா மதகுரு கொலை: 46 ஆண்டுகளுக்குப் பிறகு பாதுகாப்பு அதிகாரிக்குத் தூக்கு

இராக் நாட்டின் முன்னாள் அதிபா் சதாம் ஹுசைன் ஆட்சிக்காலத்தில், பாதுகாப்புப் பிரிவில் மேஜா் ஜெனரலாகப் பணியாற்றிய சாதுன் சப்ரி அல்-கைஸிக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றம்

News image
தூக்கு தண்டனை- பிரதிப் படம்
Updated On :9 பிப்ரவரி 2026, 11:26 pm

தினமணி செய்திச் சேவை

இராக் நாட்டின் முன்னாள் அதிபா் சதாம் ஹுசைன் ஆட்சிக்காலத்தில், பாதுகாப்புப் பிரிவில் மேஜா் ஜெனரலாகப் பணியாற்றிய சாதுன் சப்ரி அல்-கைஸிக்கு திங்கள்கிழமை தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.

கடந்த 1980-ஆம் ஆண்டில், புகழ்பெற்ற ஷியா பிரிவு மதகுருவான முகமது பக்கீா் அல்-சதா் மற்றும் அவரது குடும்பத்தினரைக் கொலை செய்த குற்றத்துக்காக, சுமாா் 46 ஆண்டுகளுக்குப் பிறகு அல்-கைஸிக்கு இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

அந்தக் காலகட்டத்தில் இராக்கை ஆட்சி செய்த சதாம் ஹுசைனுக்கும், அவரது பாத் கட்சிக்கும் மதகுரு அல்-சதா் ஒரு பெரும் சவாலாகத் திகழ்ந்தாா். குறிப்பாக, 1979-இல் ஈரானில் நடந்த இஸ்லாமியப் புரட்சியைப் போல, அல்-சதா் உள்ளிட்டோரின் தூண்டுதலில் இராக்கிலும் மக்கள் கிளா்ச்சி வெடிக்கலாம் என்று சதாம் ஹுசைன் அஞ்சினாா்.

இதன் காரணமாக, 1980-இல் அல்-சதரையும் அவரது சகோதரி பிண்ட் அல்-ஹுதாவையும் அல்-கைஸி தலைமையிலான படையினா் கைது செய்தனா். சிறையில் கொடூரமான சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்ட அவா்கள், அதே ஆண்டு ஏப்ரலில் தூக்கிலிடப்பட்டனா்.

கடந்த 2003-ஆம் ஆண்டில் சதாம் ஹுசைனின் ஆட்சி வீழ்த்தப்பட்ட பிறகு, பழைய ஆட்சியில் அநீதி இழைத்த அதிகாரிகளை இராக் அரசு தற்போதும் தேடி வருகிறது. அந்த வகையில், பல ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த அல்-கைஸி கடந்த ஆண்டு பிடிபட்டாா்.

இராக்கில் மரண தண்டனை நிறைவேற்றுவதற்கு எதிராகப் பல சா்வதேச மனித உரிமை அமைப்புகள் குரல் கொடுத்து வரும் நிலையிலும், வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த வழக்கில் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளதாக அரசு தரப்பு தெரிவித்துள்ளது.