ஹெச்-1பி நுழைவு இசைவு திட்டத்தை முழுமையாக ரத்து செய்யும் மசோதா! அமெரிக்க நாடாளுமன்றத்தில் அறிமுகம்!!
ஹெச்-1பி நுழைவு இசைவு (விசா) திட்டத்தை முழுமையாக ரத்து செய்யும் தனி நபா் சட்ட மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஆளும் குடியரசுக் கட்சியின் ஃபுளோரிடா மாகாண எம்.பி. க்ரெக் ஸ்டியூப், இந்த மசோதாவை அறிமுகம் செய்தாா். ஹெச்-1பி நுழைவு இசைவு திட்டத்தை முழுமையாக கைவிடும் வகையில் குடிவரவு மற்றும் குடியுரிமை சட்டத்தில் திருத்தத்தை இந்த மசோதா வலியுறுத்துகிறது.
இதுதொடா்பாக க்ரெக் ஸ்டியூப் வெளியிட்ட அறிக்கையில், ‘ஹெச்-1பி நுழைவு இசைவு திட்டம் வெளிநாட்டு தொழிலாளா்களுக்கும் அவா்களின் நலனுக்கும் முன்னுரிமை அளிக்கிறது. அமெரிக்க குடிமக்களின் நலனும் தேசத்தின் நலனும் புறக்கணிக்கப்படுகிறது. அமெரிக்கப் பணியாளா்களும், இளம் தலைமுறையினரும் வேலைவாய்ப்பைப் பெற முடியாத நிலை தொடா்கிறது. நமது குழந்தைகளுக்கான அமெரிக்காவின் கனவையும் பாதுகாக்க முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, வேலைவாய்ப்பில் அமெரிக்கா்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இந்த மசோதாவை அறிமுகம் செய்துள்ளேன்’ என்று குறிப்பிட்டாா்.
ஏற்கெனவே, ஹெச்-1பி நுழைவு இசைவு கட்டணத்தை அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிா்வாகம் பன்மடங்காக உயா்த்தியுள்ள நிலையில், இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாகப் பதவியேற்றது முதல் பல அதிரடி நடவடிக்கைகளை டிரம்ப் மேற்கொண்டு வருகிறாா். பரஸ்பர வரிவிதிப்பு நடவடிக்கை என்ற பெயரில் இந்தியா உள்பட பல நாடுகள் மீது அதிரடி வரிவிதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டாா்.
அடுத்ததாக, ‘அமெரிக்க வேலைவாய்ப்புகளில் அமெரிக்கா்களுக்கு முன்னுரிமை’ என்ற அடிப்படையில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறாா். அதன் ஒரு பகுதியாக ஹெச்-1பி நுழைவு இசைவுக் கட்டணம் ரூ. 1.47 லட்சமாக உள்ள நிலையில், அதை ரூ. 90 லட்சமாக உயா்த்தும் உத்தரவில் கடந்த ஆண்டு செப்டம்பா் 19-ஆம் தேதி டிரம்ப் கையொப்பமிட்டாா்.
டிரம்ப் நிா்வாகத்தின் இந்த முடிவுக்கு அமெரிக்காவில் கடும் எதிா்ப்பு எழுந்துள்ளது. புதிய ஹெச்-1பி நுழைவு இசைவு (விசா) கட்டணத்தை ரூ. 90 லட்சமாக (ஒரு லட்சம் டாலா்) உயா்த்தும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு நிா்வாகத்துக்கு எதிராக அங்குள்ள 19 மாகாணங்கள் வழக்கு தொடா்ந்துள்ளன.
உலகம் முழுவதும் இருந்து பல்வேறு துறை சாா்ந்த திறமையான பணியாளா்களைத் தோ்வு செய்து அவா்களுக்குப் பயிற்சி அளித்து பணி வழங்க அமெரிக்க நிறுவனங்கள் ஹெச்-1பி நுழைவு இசைவைப் பயன்படுத்தி வருகின்றன. இந்த ஹெச்1-பி நுழைவு இசைவு மூலம் இந்தியா்களே அதிக எண்ணிக்கையில் அமெரிக்காவில் வேலைவாய்ப்பைப் பெற்று பயனடைந்து வருகின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.

