காஸாவில் மறுசீரமைப்புக்காகவும் அமைதியை நிலைநாட்டவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள அமைதி வாரியத்தின் முதல் கூட்டம் பிப். 19-இல் வாஷிங்டனில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் அமைதி வாரிய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் அல்லது அவர்களது சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
இந்த நிலையில், காஸா அமைதி வாரியத்தில் சேர டிரம்ப்பின் அழைப்பை ஏற்றுக்கொண்ட பாகிஸ்தானும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்கிறது. இதற்காக அந்நாட்டின் பிரதமர் ஷேபாஸ் ஷரீஃப் பிப். 18-இல் அமெரிக்கா செல்வார் என்று தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாகிஸ்தானுடன், எகிப்து, ஜோர்டான், இந்தோனேசியா, கத்தார், சவூதி அரேபியா, துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளும் ‘அமெரிக்க அமைதி மையத்தில்’ நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். அப்போது, ‘காஸா மறுசீரமைப்பு’ பற்றியே முக்கியமாக விவாதிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Summary
Pakistan Prime Minister Shehbaz Sharif is expected to attend the inaugural session of the Board of Peace on Gaza to be held next week in Washington.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

74 வயதிலும் இளமையான தோற்றம்... மம்மூட்டியின் ரகசியம் இதுதானா?

அமெரிக்கா - ஈரான் இடையே மத்தியஸ்தம் செய்யத் தயார் - பாகிஸ்தான்
கண்கள் அடிக்கடி துடிப்பதற்கு இதுதான் காரணம்!

அமெரிக்கா, இஸ்ரேலுடன் பகைமையை பிரதமர் விரும்பவில்லை: காங்கிரஸ்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


