அமெரிக்காவில் 70 சதவிகித தலை மற்றும் கழுத்து புற்றுநோய்களுக்கு ஹியூமன் பாபிலோமாவைரஸ் எனப்படும் எச்பிவி வைரஸ், காரணமாக இருப்பதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
ஆண்டுதோறும் இது அதிகரித்து வரும் நிலையில், கருப்பை வாய் புற்றுநோய் போல இதனை முன்கூட்டியே கண்டறியும் வழிமுறைகள் இல்லை. இதனால், தலை மற்றும் கழுத்தில் கட்டிகள் அபரிமிதமாக வளர்ச்சியடைந்த பிறகே கண்டறிய முடிகிறது.
ஆனால், நாவல் லிக்விட் பயாப்சி டூல் மற்றும் எச்பிவி - டீப்சீக் போன்றவற்றின் மூலம், கழுத்து மற்றும் தலை புற்றுநோய் வருவதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே கண்டறிய முடியும் என்று மருத்துவ இதழில் வெளியாக கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புற்றுநோய் கட்டிகளால் இரத்த ஓட்டத்தில் வெளியேற்றப்படும் HPV DNAவின் நுண்ணிய துகள்களைக் கண்டறிய HPV-DeepSeek எனப்படும் முறை, முழு-மரபணு வரிசைமுறையைப் பயன்படுத்துகிறது. இந்தக் குழுவின் ஆய்வுகள், ஏற்கனவே உள்ள நோயறிதல் முறைகளை விட மிகவும் சிறப்பாக செயல்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழு 56 ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்து, அதில் 28 பேருக்கு கழுத்து மற்றும் தலை புற்றுநோய் வருவதற்கான சாத்தியக் கூறுகளைக் கண்டறிந்து அதனை முன்கூட்டியே தடுத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 22 பேருக்கு புற்றுநோய் கட்டிகளின் துகள்கள் தென்பட்டதாகவும் கூறப்படுகிறது.
எனவே, மக்கள் இதுபோன்ற சோதனைகளை மேற்கொள்வதன் மூலம் முன்கூட்டியே கழுத்து மற்றும் தலை புற்றுநோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கர்ப்பம்: சிக்கல்களுக்கு 3 காரணங்கள்! எந்தெந்த வாரங்களில் பரிசோதனை அவசியம்?

அப்போலோவில் ரத்தப் பரிசோதனை மூலம் புற்றுநோய் கண்டறியும் வசதி!

29 ஆண்டுகளுக்கு முந்தைய ரஜெளரி காா்டன் கொலை சம்பவம்: தேடப்பட்டவா் கைது







