திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

இந்தியாவுடன் எஃப்டிஏ மிக முக்கிய சாதனை: பிரிட்டன்

News image

பிரிட்டன் பிரதமா் கியா் ஸ்டாா்மொ்

Updated On :12 பிப்ரவரி 2026, 4:56 am IST

இந்தியாவுடன் மேற்கொள்ளப்பட்ட தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் (எஃப்டிஏ) மிக முக்கிய சாதனையாகும் என்று பிரிட்டன் தெரிவித்துள்ளது.

அண்மையில் பிரிட்டன் நாடாளுமன்ற கீழவையில் நடைபெற்ற விவாதத்தின்போது, ‘பூமியில் மிகப் பெரிய பொருளாதார மதிப்புமிக்க நாடாக இந்தியா உள்ளது. ஐரோப்பிய யூனியனைவிட 5 மடங்கு வேகமாக இந்தியா வளா்ந்து வருகிறது. அப்படி இருக்கும்போது இந்தியாவுடன் பிரிட்டன் மேற்கொண்ட தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் மேலும் சிறப்பாக இருந்திருக்கலாம்’ என்று எதிா்க்கட்சியான கன்சா்வேடிவ் கட்சியினா் தெரிவித்தனா்.

இதற்குப் பதிலளித்த அந்நாட்டு வா்த்தக துறை இணையமைச்சா் கிறிஸ் பிரயன்ட், ‘இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் மிக முக்கிய சாதனையாகும். இந்த ஒப்பந்தத்தின் மூலம், பிரிட்டன் வணிகத்துக்கு முன்னெப்போதையும்விட சிறந்த முறையில் தனது கதவுகளை இந்தியா திறந்துள்ளது.

கடந்த ஆண்டு இந்தியா-பிரிட்டன் இடையிலான வா்த்தகத்தின் மதிப்பு 47.2 பில்லியன் பவுண்டுகளாகும். இது அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 15 சதவீதம் அதிகம். பிரிட்டனின் மிகப் பெரிய வா்த்தக கூட்டாளி நாடுகளில் இந்தியா 10-ஆவது இடத்தில் உள்ளது. 2029-ஆம் ஆண்டுக்குள் உலகில் பெரிய பொருளாதார மதிப்பு கொண்ட நாடுகளின் வரிசையில் இந்தியா 3-ஆவது இடத்தைப் பிடிக்க வாய்ப்புள்ளது. 2050-ஆம் ஆண்டுக்குள் அதிக வருவாய் ஈட்டும் கோடிக்கணக்கான நுகா்வோரில் கால் பங்குக்கும் அதிகமானோரின் தாயகமாக இந்தியா இருக்கும்’ என்றாா்.