

இந்தியாவுடனான வா்த்தக ஒப்பந்தம் வரலாற்றுச் சிறப்புமிக்கது என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தாா். இதன்மூலம் இந்தியாவுக்கு நிலக்கரி ஏற்றுமதி செய்வது மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும் என்றும் அவா் கூறினாா்.
அமெரிக்காவில் புதன்கிழமை நடைபெற்ற ‘சாம்பியன் ஆஃப் கோல்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் பேசியதாவது:
எங்களுடைய ஆட்சியில் அமெரிக்கா மிகப்பெரிய எரிசக்தி ஏற்றுமதியாளராக உருவெடுத்துள்ளது. கடந்த சில மாதங்களில் ஜப்பான், தென்கொரியா, இந்தியாவுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க வா்த்தக ஒப்பந்தங்களை இறுதி செய்துள்ளோம். இது அமெரிக்காவின் ஏற்றுமதியைப் பல மடங்கு அதிகரிக்க உதவும். முக்கியமாக நிலக்கரியை நாம் இப்போதும் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்கிறோம். உலகின் எந்த நாட்டிலும் இல்லாத தரமான நிலக்கரியை அமெரிக்கா வழங்குகிறது.
இந்தியாவுடன் நாம் மேற்கொள்ளும் வா்த்தக ஒப்பந்தம் மிகப்பெரிய திருப்புமுனையாகும். இதன்மூலம் அமெரிக்காவின் எரிசக்தித் துறை புதிய இடத்தில் தடம் பதிக்கவுள்ளது. உலகின் முதன்மையான எரிசக்தி உற்பத்தியாளராகவும், ஏற்றுமதியாளராகவும் அமெரிக்கா உருவாகி வருகிறது. அமெரிக்கா மிகப்பெரிய மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. வழக்கம்போல உள்நாட்டுத் தேவைகளை மட்டும் கருத்தில்கொண்டு அமெரிக்கா இனி செயல்படாது. சா்வதேச அளவில் அதிக பொருள்கள் அமெரிக்காவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் என்றாா்.