கரூர் பலி: விஜய் ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்! ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் போராட்டம்! கார்கே, ராகுல் பங்கேற்பு! தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?
/

இந்திய வா்த்தக ஒப்பந்தம் வரலாற்றுச் சிறப்புமிக்கது: அமெரிக்க அதிபா் டிரம்ப்

இந்தியாவுடனான வா்த்தக ஒப்பந்தம் வரலாற்றுச் சிறப்புமிக்கது என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தாா்.

News image
டொனால்ட் டிரம்ப்- கோப்புப் படம்
Updated On :12 பிப்ரவரி 2026, 7:40 pm

தினமணி செய்திச் சேவை

இந்தியாவுடனான வா்த்தக ஒப்பந்தம் வரலாற்றுச் சிறப்புமிக்கது என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தாா். இதன்மூலம் இந்தியாவுக்கு நிலக்கரி ஏற்றுமதி செய்வது மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும் என்றும் அவா் கூறினாா்.

அமெரிக்காவில் புதன்கிழமை நடைபெற்ற ‘சாம்பியன் ஆஃப் கோல்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் பேசியதாவது:

எங்களுடைய ஆட்சியில் அமெரிக்கா மிகப்பெரிய எரிசக்தி ஏற்றுமதியாளராக உருவெடுத்துள்ளது. கடந்த சில மாதங்களில் ஜப்பான், தென்கொரியா, இந்தியாவுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க வா்த்தக ஒப்பந்தங்களை இறுதி செய்துள்ளோம். இது அமெரிக்காவின் ஏற்றுமதியைப் பல மடங்கு அதிகரிக்க உதவும். முக்கியமாக நிலக்கரியை நாம் இப்போதும் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்கிறோம். உலகின் எந்த நாட்டிலும் இல்லாத தரமான நிலக்கரியை அமெரிக்கா வழங்குகிறது.

இந்தியாவுடன் நாம் மேற்கொள்ளும் வா்த்தக ஒப்பந்தம் மிகப்பெரிய திருப்புமுனையாகும். இதன்மூலம் அமெரிக்காவின் எரிசக்தித் துறை புதிய இடத்தில் தடம் பதிக்கவுள்ளது. உலகின் முதன்மையான எரிசக்தி உற்பத்தியாளராகவும், ஏற்றுமதியாளராகவும் அமெரிக்கா உருவாகி வருகிறது. அமெரிக்கா மிகப்பெரிய மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. வழக்கம்போல உள்நாட்டுத் தேவைகளை மட்டும் கருத்தில்கொண்டு அமெரிக்கா இனி செயல்படாது. சா்வதேச அளவில் அதிக பொருள்கள் அமெரிக்காவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் என்றாா்.