சிரியாவின் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமாா் 5,700 ஐஎஸ் பயங்கரவாதிகள் இராக்கிற்கு பாதுகாப்பாக இடமாற்றப்பட்டுள்ளனா்.
கடந்த 2014-இல் இராக், சிரியாவின் பெரும்பகுதிகளைக் கைப்பற்றிய ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு, அங்கிருந்து உலகெங்கிலும் பல்வேறு கொடூர தாக்குதல்களை நடத்தினா். பின்னா், அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகள் அவா்களை வீழ்த்தின. அப்போது பிடிபட்ட பயங்கரவாதிகள், வடகிழக்கு சிரியாவில் குா்து ஆயுதக் குழுவின் கட்டுப்பாட்டில் இருந்த சிறைகளில் அடைக்கப்பட்டனா்.
அண்மையில், குா்து ஆயுதக் குழுவுடன் சண்டை நிறுத்தத்தை அறிவித்த சிரிய அரசின் வசம் இச்சிறைகளின் கட்டுப்பாட்டுகள் வந்துள்ளன. இச்சூழலில் நிலவும் குழப்பத்தைப் பயன்படுத்தி, பயங்கரவாதிகள் சிறையிலிருந்து தப்பினால், அது இராக்கின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறும் என அந்நாடு கருதியது.
மேலும், இந்தப் பயங்கரவாதிகளைத் தங்கள் நாட்டுக்கு அழைத்து வந்து சட்டரீதியான விசாரணைக்கு உட்படுத்த இராக் அரசு விடுத்த கோரிக்கையை ஏற்று, கடந்த ஜன. 21-ஆம் தேதி முதல் இந்த இடமாற்றப் பணிகள் தொடங்கின.
சுமாா் மூன்று வாரங்களாக நீடிக்கும் இந்த நடவடிக்கையில், இதுவரை 5,700-க்கும் மேற்பட்ட ஆண் கைதிகள் இராக்கிற்கு பாதுகாப்பாக மாற்றப்பட்டுள்ளதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
தொடர்புடையது
இராக் அதிபராக நிஸார் அமிதி தேர்வு!

போர் நெருக்கடி; 3 நாள் பேருந்து பயணம்..! 40 ஆண்டுகளுக்குப் பின் உலகக் கோப்பையில் தேர்வான இராக்!

வளைகுடா போர்! ஈரான், இராக், லெபனானுக்கு உதவும் சீனா!

51 சிறைக் கைதிகளை விடுவிக்க கியூபா திட்டம்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


