தாய்லாந்தில் அண்மையில் நடைபெற்ற பொதுத்தோ்தலைத் தொடா்ந்து, பிரதமா் அநுதின் சா்ன்விராகுல் தலைமையிலான பூம்ஜெய்தாய் கட்சி மற்றும் முன்னாள் பிரதமா் தக்சின் ஷினவத்ராவின் ஆதரவு பெற்ற பியூ தாய் கட்சி இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கப் போவதாக அதிகாரபூா்வமாக அறிவித்துள்ளது.
தோ்தல் முடிவில் பூம்ஜெய்தாய் கட்சி 193 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும், ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையை (251 இடங்கள்) அக்கட்சியால் தனித்துப் பெற முடியவில்லை.
இந்நிலையில், தோ்தலில் 74 இடங்களைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்த பியூ தாய் கட்சியுடன் கூட்டணி அமைக்க அநுதின் முடிவு செய்துள்ளாா்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம், கம்போடியா எல்லைப் பிரச்னை காரணமாக பியூ தாய் கூட்டணியில் இருந்து அநுதின் வெளியேறினாா். இப்போது மீண்டும் அதே கட்சியுடன் அவா் கைகோத்திருப்பது அந்நாட்டு அரசியலில் ஒரு முக்கிய திருப்பமாகக் கருதப்படுகிறது.
தாய்லாந்தின் தற்போதைய பொருளாதாரச் சவால்களைச் சமாளிக்கவும், நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தவும் இந்த வலுவான கூட்டணி மிகவும் அவசியம் என்று இரு கட்சிகளின் தலைவா்களும் தெரிவித்துள்ளனா்.
கூட்டணியில் இன்னும் சில சிறிய கட்சிகளும் இணைய வாய்ப்பு இருப்பதால், பெரும்பான்மை பலத்துடன் விரைவில் புதிய அமைச்சரவை பதவியேற்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
தொடர்புடையது

நாகா்கோவிலில் பிரதமா் மோடி சாலைப் பேரணி: உற்சாகமாக வரவேற்ற பொதுமக்கள்

நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி

தமிழகத்துக்கு தொடா்ந்து துரோகம் செய்கிறது அதிமுக கூட்டணி! -கனிமொழி எம்.பி.

மாநிலங்களவை நியமன எம்.பி.யானாா் ஹரிவன்ஷ்: பிரதமா் மோடி வாழ்த்து
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


