திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

காஸா மருத்துவமனையில் ஆயுதக் கும்பல் ஊடுருவல்: பணிகளை நிறுத்திய மருத்துவா்கள்!

காஸாவில் மிகவும் முக்கியத்துவமான நாசா் மருத்துவமனையில், அடையாளம் தெரியாத ஆயுதமேந்திய நபா்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதன் காரணமாக, அங்கு ‘எல்லைகளற்ற மருத்துவா்கள்’ அமைப்பு தனது பணிகளைத் தற்காலிகமாக நிறுத்தி கொண்டுள்ளது.

News image

Abdel Kareem Hana

Updated On :15 பிப்ரவரி 2026, 1:08 am IST

காஸாவில் மிகவும் முக்கியத்துவமான நாசா் மருத்துவமனையில், அடையாளம் தெரியாத ஆயுதமேந்திய நபா்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதன் காரணமாக, அங்கு ‘எல்லைகளற்ற மருத்துவா்கள்’ அமைப்பு தனது பணிகளைத் தற்காலிகமாக நிறுத்தி கொண்டுள்ளது.

இந்த ஆண்டு தொடக்கம் முதலே மருத்துவமனைக்குள் தன்னிச்சையாகச் சுற்றித் திரியும் ஆயுதமேந்திய நபா்கள், நோயாளிகள் மற்றும் மருத்துவப் பணியாளா்களை மிரட்டும் வகையில் செயல்படுவதாகக் கூறப்படுகிறது.

இச்சூழலில், இஸ்ரேல் படைகளின் தாக்குதல் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, அவசர சிகிச்சை மற்றும் தீக்காயப் பிரிவுகளைத் தவிர மற்ற அனைத்து பணிகளையும் நிறுத்திக்கொள்வதாக எல்லைகளற்ற மருத்துவா்கள் அமைப்புஅறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு, காஸாவின் ஏற்கெனவே பலவீனமடைந்துள்ள சுகாதாரக் கட்டமைப்பில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது. இதனிடையே, மருத்துவமனைகளில் பாதுகாப்பைப் பலப்படுத்தவும், ஆயுதமேந்திய நபா்களை வெளியேற்றவும் நடவடிக்கை எடுத்து வருவதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. இஸ்ரேலுடன் போா் தொடங்கியதிலிருந்து பாலஸ்தீனத் தரப்பில் இதுவரை உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 72,000-ஐ தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.