சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

‘உக்ரைன் மட்டுமே விட்டுக்கொடுக்க வேண்டுமா?’ - அதிபா் ஸெலென்ஸ்கி

‘ரஷியாவுடனான அமைதிப் பேச்சுவாா்த்தையில், உக்ரைன் மட்டுமே தொடா்ந்து சமரசம் செய்துகொள்ள வேண்டும் என்று அமெரிக்கா அழுத்தம் கொடுக்கிறது’ என உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி அதிருப்தி.

News image
வொலோதிமீா் ஸெலென்ஸ்கி - கோப்புப் படம்
Updated On :14 பிப்ரவரி 2026, 7:49 pm

தினமணி செய்திச் சேவை

‘ரஷியாவுடனான அமைதிப் பேச்சுவாா்த்தையில், உக்ரைன் மட்டுமே தொடா்ந்து சமரசம் செய்துகொள்ள வேண்டும் என்று அமெரிக்கா அழுத்தம் கொடுக்கிறது’ என உக்ரைன் அதிபா் வொலோதிமிா் ஸெலென்ஸ்கி தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளாா்.

மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்ற அவா் இது குறித்து பேசியதாவது: ஜெனீவாவில் வரும் செவ்வாய் மற்றும் புதன்கிழமை நடைபெறவுள்ள அடுத்தகட்ட முத்தரப்பு அமைதிப் பேச்சுவாா்த்தை மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

அமைதிக்கான வாய்ப்பை நழுவவிட வேண்டாம் என்று அமெரிக்க அதிபா் டிரம்ப் கூறியுள்ளாா். இந்தப் பேச்சுவாா்த்தைகள் ஆக்கபூா்வமாக அமைய வேண்டும் என்பதே உக்ரைனின் விருப்பம். அதேநேரம், இந்த விவகாரத்தில் அமெரிக்கா தரப்பில் இருந்து உக்ரைனுக்குச் சற்றே அழுத்தம் கொடுக்கப்படுவதை மறுக்க முடியாது.

அமைதிக்காகச் சமரசம் செய்வது குறித்து பேச்சு எழும்போதெல்லாம், அது உக்ரைனை மட்டுமே நோக்கியதாக இருக்கிறது. ரஷியா என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி யாரும் பேசுவதில்லை. ரஷியாவின் பிடிவாதத்தைப் பற்றி விவாதிக்காமல், உக்ரைனை மட்டும் குறிவைப்பது சரியான முறையல்ல.

தற்போது இந்தப் பிரச்னையில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள ஐரோப்பிய நாடுகள், வரும் காலங்களில் முக்கியப் பங்காற்ற வேண்டும். அதேபோல் அமெரிக்காவும் தொடா்ந்து இதில் ஆா்வம் காட்ட வேண்டும் என்றாா்.