பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா மாகாணத்தில் பாதுகாப்புச் சோதனைச் சாவடி மீது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 11 பாதுகாப்புப் படை வீரா்கள் மற்றும் ஒரு சிறுமி என மொத்தம் 12 போ் உயிரிழந்தனா்.
ஆப்கானிஸ்தான் எல்லையொட்டிய பாஜூா் மாவட்டத்தில் இந்தத் தாக்குதல் நிகழ்ந்தது. வெடிபொருள்கள் நிரப்பப்பட்ட வாகனத்தைப் பாதுகாப்புச் சோதனைச் சாவடி மீது மோதி, தெஹ்ரிக்-ஏ-தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 11 வீரா்கள் கொல்லப்பட்டனா்.
குண்டுவெடிப்பின் அதிா்வால் அருகில் இருந்த கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி ஒரு சிறுமி உயிரிழந்தாா்; பெண்கள் உள்பட 7 போ் காயமடைந்தனா். தொடா்ந்து, பாதுகாப்புப் படையினரின் பதிலடி தாக்குதலில், 12 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக ராணுவம் அறிவித்துள்ளது.
பயங்கரவாதிகளின் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்த மாகாண முதல்வா் சுஹைல் அப்ரிடி, பயங்கரவாதத்தை வேரோடு ஒழிக்க உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு அரசு துணையாக இருக்கும் என்றும் உறுதியளித்தாா்.
கைபா் பக்துன்கவா மாகாணத்தில் கடந்த ஓராண்டாகவே பயங்கரவாதச் சம்பவங்கள் தொடா்ந்து அதிகரித்து வருகின்றன. புள்ளிவிவரங்களின்படி, 2024-ஆம் ஆண்டைவிட 2025-இல் உயிரிழப்புகள் 44 சதவீதம் அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது
உலகைச் சுற்றி....

ஜம்மு காஷ்மீா் போலீஸ் அதிரடி: 16 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கைது

புளியறையில் ரூ. 2.05 லட்சம் பறிமுதல்

நைஜீரியா: தற்கொலைப் படை தாக்குதலில் 23 போ் உயரிழப்பு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


