கோப்புப்படம். மாலத்தீவு
உலகம்
12 அதிவிரைவு படகுகள் கட்ட மாலத்தீவுக்கு உதவி: இந்தியா உறுதி
மாலத்தீவுக்கு 12 அதிவிரைவு படகுகள் கட்டமைக்க தேவையான உதவிகள் அளிக்கப்படும் என இந்தியா உறுதியளித்துள்ளது.
மாலத்தீவுக்கு 12 அதிவிரைவு படகுகள் கட்டமைக்க தேவையான உதவிகள் அளிக்கப்படும் என இந்தியா உறுதியளித்துள்ளது.
இந்திய தூதா் ஜி.பாலசுப்பிரமணியத்தின் தகவல்களை மேற்கோள்காட்டி, அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் ஏற்கெனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, 12 அதிவிரைவு படகுகளை கட்டமைக்க இந்தியா உதவி செய்யுமென ஜி. பாலசுப்பிரமணியம் தெரிவித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மே மாதம் இந்தியா, மாலத்தீவு இடையே 13 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதில் இந்தியா கடனுதவி அளிப்பது, அதிவிரைவு படகுகளை அளிப்பது உள்ளிட்டவையும் அடங்கும்.
மாலத்தீவு அதிபா் மொய்சூ கடந்த 2024-ஆம் ஆண்டு அக்டோபரில் இந்தியாவுக்கு வந்தாா். இதையடுத்து, கடந்த 2025-ஆம் ஆண்டு ஜுலையில் இந்திய பிரதமா் மோடி, மாலத்தீவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

