விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

12 அதிவிரைவு படகுகள் கட்ட மாலத்தீவுக்கு உதவி: இந்தியா உறுதி

மாலத்தீவுக்கு 12 அதிவிரைவு படகுகள் கட்டமைக்க தேவையான உதவிகள் அளிக்கப்படும் என இந்தியா உறுதியளித்துள்ளது.

News image

கோப்புப்படம். - மாலத்தீவு

Updated On :18 பிப்ரவரி 2026, 8:18 pm

மாலத்தீவுக்கு 12 அதிவிரைவு படகுகள் கட்டமைக்க தேவையான உதவிகள் அளிக்கப்படும் என இந்தியா உறுதியளித்துள்ளது.

இந்திய தூதா் ஜி.பாலசுப்பிரமணியத்தின் தகவல்களை மேற்கோள்காட்டி, அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் ஏற்கெனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, 12 அதிவிரைவு படகுகளை கட்டமைக்க இந்தியா உதவி செய்யுமென ஜி. பாலசுப்பிரமணியம் தெரிவித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம் இந்தியா, மாலத்தீவு இடையே 13 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதில் இந்தியா கடனுதவி அளிப்பது, அதிவிரைவு படகுகளை அளிப்பது உள்ளிட்டவையும் அடங்கும்.

மாலத்தீவு அதிபா் மொய்சூ கடந்த 2024-ஆம் ஆண்டு அக்டோபரில் இந்தியாவுக்கு வந்தாா். இதையடுத்து, கடந்த 2025-ஆம் ஆண்டு ஜுலையில் இந்திய பிரதமா் மோடி, மாலத்தீவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.