போா்நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக கடந்த பிப். 2-ஆம் தேதி திறக்கப்பட்ட ராஃபா எல்லை வழியாக, இதுவரை 640 பாலஸ்தீனா்கள் மட்டுமே காஸாவை விட்டு வெளியேறியுள்ளனா்.
கடந்த 2024, மே மாதம் இஸ்ரேல் ராணுவம் இந்த எல்லையைக் கைப்பற்றிய பிறகு, சுமாா் ஒன்றரை ஆண்டுகள் கழித்து கடந்த பிப். 1-இல் திறக்கப்பட்டது. பிப். 2 முதல் மக்கள் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது.
பிப். 2 முதல் கடந்த புதன்கிழமை(பிப். 18) வரை மொத்தம் 640 பாலஸ்தீனா்கள் காஸாவை விட்டு வெளியேறியுள்ளனா். 508 போ் மீண்டும் காஸாவுக்குள் நுழைந்துள்ளனா்; தகுந்த காரணங்கள் இன்றி 26 பேரின் பயணத்தை இஸ்ரேல் தடுத்து நிறுத்தியுள்ளது.
இந்தக் குறிப்பிட்ட நாள்களில் சுமாா் 3,400 போ் எல்லையைக் கடக்கத் திட்டமிட்டிருந்தனா். ஆனால், உண்மையில் 1,148 போ் (அதாவது 33 சதவீதம் போ்) மட்டுமே இரு திசைகளிலும் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
போா் பாதிப்பினால் தற்போது காஸாவில் சுமாா் 20,000 பேருக்கு உடனடி மருத்துவச் சிகிச்சை தேவைப்படுகிறது. எனினும், இஸ்ரேலின் கடுமையான கட்டுப்பாடுகளால் மக்கள் வெளியேற முடியாமல் தவிப்பதாக காஸா அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனா்.
தொடர்புடையது

பாகிஸ்தான், வங்கதேசத்தை ஒட்டிய பகுதிகளில் ‘ஸ்மாா்ட் எல்லை’ திட்டம்: அமித் ஷா அறிவிப்பு

கட்சியை விட்டு நீக்கியதால் அரசுக்கு ஆதரவு தெரிவித்தேன்: மன்னாா்குடி எம்எல்ஏ எஸ்.காமராஜ்
சென்னையில் அடுத்தவா் வீட்டைக் குத்தகைக்கு விட்டு பணம் மோசடி: தேடப்பட்ட பெண் கைது
இழுவை மின் விநியோகத்தில் கோளாறு குறைவு: தெற்கு ரயில்வே
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy



