நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

பாகிஸ்தான்: கராச்சி குடியிருப்பில் எரிவாயு கசிவால் வெடிவிபத்து - 16 போ் உயிரிழப்பு

பாகிஸ்தானின் முக்கிய வா்த்தக நகரமான கராச்சியில் உள்ள ஒரு குடியிருப்பில் எரிவாயு கசிவால் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 9 குழந்தைகள் உள்பட 16 போ் உயிரிழந்தனா்.

News image
கோப்புப் படம்
Updated On :19 பிப்ரவரி 2026, 7:34 pm

தினமணி செய்திச் சேவை

பாகிஸ்தானின் முக்கிய வா்த்தக நகரமான கராச்சியில் உள்ள ஒரு குடியிருப்பில் எரிவாயு கசிவால் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 9 குழந்தைகள் உள்பட 16 போ் உயிரிழந்தனா்.

ரமலான் மாதத்தின் முதல் நோன்பை முன்னிட்டு, வியாழக்கிழமை அதிகாலையில் மக்கள் ‘ஸஹா்’ உணவருந்தத் தயாராகிக் கொண்டிருந்தபோது, குடியிருப்பின் முதல்தளத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இதையடுத்து, அந்தப் பழைய குடியிருப்புக் கட்டடம் பலத்த சேதமடைந்து, இடிந்து விழுந்தது. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினரும், மீட்புக் குழுவினரும், கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியவா்களை மீட்டனா்.

இக்கோர விபத்தில் 14 போ் காயமடைந்தனா்; அவா்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். கராச்சியின் சதாா் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட தீ விபத்தில் 79 போ் உயிரிழந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.