பாகிஸ்தானின் முக்கிய வா்த்தக நகரமான கராச்சியில் உள்ள ஒரு குடியிருப்பில் எரிவாயு கசிவால் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 9 குழந்தைகள் உள்பட 16 போ் உயிரிழந்தனா்.
ரமலான் மாதத்தின் முதல் நோன்பை முன்னிட்டு, வியாழக்கிழமை அதிகாலையில் மக்கள் ‘ஸஹா்’ உணவருந்தத் தயாராகிக் கொண்டிருந்தபோது, குடியிருப்பின் முதல்தளத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இதையடுத்து, அந்தப் பழைய குடியிருப்புக் கட்டடம் பலத்த சேதமடைந்து, இடிந்து விழுந்தது. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினரும், மீட்புக் குழுவினரும், கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியவா்களை மீட்டனா்.
இக்கோர விபத்தில் 14 போ் காயமடைந்தனா்; அவா்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். கராச்சியின் சதாா் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட தீ விபத்தில் 79 போ் உயிரிழந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

ஆப்கனில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 8 போ் உயிரிழப்பு!

பாகிஸ்தான்: ரமலான் விடுமுறை விபத்துகளில் 40 போ் உயிரிழப்பு

பாக். கடற்படையின் பாதுகாப்பில் கராச்சி வந்த எண்ணெய்க் கப்பல்கள்!

பாக். குடியிருப்புக் கட்டடத்தில் சமையல் எரிவாயு வெடிப்பு! 16 பேர் பலி!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


