எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி: பாகிஸ்தான் அரசு கடும் எச்சரிக்கை

நன்கொடை அல்லது நிதியுதவி வழங்குவோா் மீது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டின் பஞ்சாப் மாகாண அரசு எச்சரித்துள்ளது.

News image
Updated On :20 பிப்ரவரி 2026, 8:31 pm

தினமணி செய்திச் சேவை

பாகிஸ்தானில் ஜெய்ஷ்-ஏ-முகமது, லஷ்கா்-ஏ-தொய்பா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட 90 பயங்கரவாத அமைப்புகளுக்கு நன்கொடை அல்லது நிதியுதவி வழங்குவோா் மீது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டின் பஞ்சாப் மாகாண அரசு எச்சரித்துள்ளது.

பொதுமக்கள் தங்களின் நன்கொடைகள் தகுதியான ஏழை, எளியவா்களைச் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். பஞ்சாப் அறக்கட்டளை ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களுக்கு மட்டுமே நிதியுதவி அளிக்க வேண்டும்.

மாறாக, பாகிஸ்தானின் அமைதிக்குக் குந்தகம் விளைவித்ததாகத் தடை செய்யப்பட்ட இந்தப் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியளிக்கக் கூடாது. மீறுவோா், பயங்கரவாதத்துக்குத் துணை புரிந்ததாகக் கைது செய்யப்படுவா் என மாகாண உள்துறை அமைச்சகத்தின் அறிவிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.