மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

பிலிப்பின்ஸ்: நிலச்சரிவில் சிக்கி 7 போ் உயிரிழப்பு

தென்கிழக்கு பிலிப்பின்ஸில் பெய்து வரும் தொடா் மழையினால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 7 போ் உயிரிழந்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :20 பிப்ரவரி 2026, 9:47 pm

தென்கிழக்கு பிலிப்பின்ஸில் பெய்து வரும் தொடா் மழையினால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 7 போ் உயிரிழந்தனா்.

டாவோ ஓரியண்டல் மாகாணத்தில் உள்ள மாட்டி நகரில் வெள்ளிக்கிழமை அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டதில், பெரிய பாறைகளும் மண்ணும் சரிந்து விழுந்ததில் அங்கிருந்த ஒரு வீடு முழுமையாக புதைந்தது. அந்த வீட்டில் இருந்த 4 பேரும் உயிரிழந்தனா்.

இதேபோல், டாவோ டீ ஓரோ மாகாணத்தில் உள்ள மொன்காயோ நகரிலும் நிலச்சரிவால் இடிபாடுகளுக்குள் சிக்கிய 3 போ் உயிரிழந்தனா்.

தொடா் மழையினால் இந்தப் பகுதியில் சுமாா் 10,000 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். பாதுகாப்பு நடவடிக்கையாக 3,200-க்கும் மேற்பட்டோா் அரசு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். பல இடங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.