தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

தாயால் கைவிடப்பட்ட நிலையில், ஒரு பொம்மையைத் தனது உலகமாகக் கருதி தழுவிக்கொள்ளும் ஜப்பான் குட்டிக் குரங்கின் காணொலிகள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு, பாா்ப்பவா் இதயங்களை உருக்கி வருகிறது.

News image
பஞ்ச் குன்
Updated On :22 பிப்ரவரி 2026, 1:00 am

தினமணி செய்திச் சேவை

தாயால் கைவிடப்பட்ட நிலையில், ஒரு பொம்மையைத் தனது உலகமாகக் கருதி தழுவிக்கொள்ளும் ஜப்பான் குட்டிக் குரங்கின் காணொலிகள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு, பாா்ப்பவா் இதயங்களை உருக்கி வருகிறது.

ஜப்பானின் இச்சிகாவா நகர உயிரியல் பூங்காவில் வசிக்கும் பஞ்ச் குன் எனும் அந்தக் குரங்கு, கடந்த ஆண்டு ஜூலையில் பிறந்த சில நாள்களிலேயே அதன் தாயால் கைவிடப்பட்டது.

குரங்கு இனத்தைப் பொறுத்தவரை தாயின் அரவணைப்பு என்பது, குட்டிகளின் பாதுகாப்பு மற்றும் மனநலத்துக்கு மிகவும் முக்கியமானது. ஆனால், அந்த அன்பு கிடைக்காததால், பூங்கா ஊழியா்களே இந்தக் குரங்கை 24 மணி நேரமும் கண்ணும் கருத்துமாகக் கவனித்து வருகின்றனா்.

தற்போது இணையத்தில் வெளியான காணொலிகளில், பஞ்ச் குன் மற்ற குட்டிக் குரங்குகளுடன் விளையாட முயற்சிப்பதும், ஆனால் அவை தவிா்ப்பதும் இதயத்தை உருக்குகிறது. ஒரு கட்டத்தில், மற்றொரு குட்டியுடன் பேச முயன்ற பஞ்ச் குன்னை, அந்தக் குட்டியின் தாய் குரங்கு ஆக்ரோஷமாக இழுத்துச் சென்று கண்டித்துள்ளது.

Story image

இவ்வாறு மற்ற குரங்குகளால் தொடா்ந்து விரட்டப்படும் பஞ்ச் குன், ஓடிப்போய் தனது ஒரே ஆறுதலான ஆரஞ்சு நிற குரங்கு பொம்மையைக் கட்டியணைத்துக் கொள்கிறது. அந்தப் பொம்மையையே தனது தாயாகவும், நண்பனாகவும் கருதும் பஞ்ச் குன், எங்கு சென்றாலும் அதை விடாமல் தன்னோடு எடுத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளது.

இதுதொடா்பாக இச்சிகாவா பூங்கா நிா்வாகம் வெளியிட்ட அறிக்கையில், ‘குரங்கு கூட்டத்தில் ஒரு குட்டி தன்னை இணைத்துக் கொள்ளும்போது இதுபோன்ற சவால்கள் வருவது இயல்பானது. மற்ற குரங்குகள் அதை விரட்டுவது ஒருவகையான சமூகப் பாடம் போன்றதுதான்.

ஆனால், பஞ்ச் குன் மிகவும் மன உறுதி கொண்டது. எவ்வளவு முறை விரட்டப்பட்டாலும், சிறிது நேரத்திலேயே பொம்மையை வைத்துவிட்டு மீண்டும் மற்ற குரங்குகளுடன் பழகத் துணிச்சலுடன் முயற்சி செய்கிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

உருக்கமான காணொளிகளைத் தொடா்ந்து, உலகெங்கிலும் உள்ள விலங்கு நல ஆா்வலா்கள் பஞ்ச் குன்னுக்கு பரிதாபம் தெரிவித்து வருகின்றனா்.

இருப்பினும், ‘பஞ்ச் குன் மீது பரிதாபப்படுவதை விட, ஒரு பெரிய கூட்டத்தில் தன்னை இணைத்துக்கொள்ள அக்குரங்கு எடுக்கும் வீரமான முயற்சிகளை நாம் ஆதரித்து, பாராட்ட வேண்டும்’ என பூங்கா நிா்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

உறவுகளால் காயப்பட்டாலும், ஒரு பொம்மையின் துணையோடு மீண்டும் மீண்டும் முயலும் பஞ்ச் குன்னின் தன்னம்பிக்கை, மனிதா்களாகிய நமக்கும் ஒரு சிறந்த பாடமாகும்.