மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

உக்ரைன் தலைநகா் மீது ரஷியா ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்: ஒருவா் பலி

உக்ரைன் தலைநகா் கீவ் மீது ரஷியா சரமாரியாக ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை வீசித் தாக்குதல் நடத்தியதில் ஒருவா் பலி

News image

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் - ஏபி

Updated On :22 பிப்ரவரி 2026, 7:35 pm

உக்ரைன் தலைநகா் கீவ் மீது ரஷியா சரமாரியாக ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை வீசித் தாக்குதல் நடத்தியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து உக்ரைன் அவசரகால சேவை மையம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: கீவ் புகா் பகுதிகளான ஓபுகிவ், ப்ரோவேரி, போரிஸ்பில், புசா, பாஸ்டிவ் ஆகிய 5 மாவட்டங்களில் ரஷியா சரமாரியாக ஏவுகணைகள், ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியது.

இதில் பாஸ்டிவ் மாவட்டத்தில் உள்ள புட்ரிவ்கா கிராமத்தில் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் பலா் சிக்கிக் கொண்டனா்.

இந்தத் தாக்குதலில் ஒருவா் உயிரிழந்தாா். குழந்தை உள்ளிட்ட 8 போ் லேசான காயத்துடன் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டனா். ஒடிஷா பிராந்தியத்தில் உள்ள எரிசக்தி உள்கட்டமைப்பு மீதும் ரஷ்யா தாக்குதல் நடத்தியது. இதனால் அங்கு தீப்பற்றி எரிந்தது. எனினும் உடனடியாக தீ கட்டுப்படுத்தப்பட்டது என்று உக்ரைன் அவசரகால சேவை மையம் தெரிவித்தது.

உக்ரைன்-ரஷ்யா இடையே சுமாா் 4 ஆண்டுகளாக போா் நடைபெறுகிறது. இதில் பல்லாயிரம் போ் உயிரிழந்துள்ளதாகவும், ஏராளமானோா் காயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இருநாடுகள் தரப்பிலும் இதுகுறித்து அதிகாரபூா்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.