ஆப்பிரிக்க நாடான சோமாலியா பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
சோமாலிய விமானப்படைத் தலைமைத் தளபதி முகமது ஷேக் அலி பிப்ரவரி தொடக்கத்தில் பகிஸ்தானுக்குச் சென்றிருந்தார். அப்போது சோமாலியாவுக்கு பாகிஸ்தானின் ஜே. எஃப். - 17 தண்டர் ப்ளாக்-3 போர் விமானங்கள் கொள்முதல் செய்ய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, சோமாலியாவுக்கு 24 போர் விமானங்கள் கொள்முதல் தொடர்பாகப் பேச்சுவார்த்தை அடுத்த கட்டத்தை எட்டியிருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்தன.
சீனா மற்றும் பாகிஸ்தானின் கூட்டு முயற்சியால் தயாரிக்கப்படும் இலகு ரக போர் விமானமான ஜே. எஃப். - 17 தண்டர், கடந்தாண்டு இந்தியாவுக்கு எதிரான ஆபரேசன் சிந்தூர் சண்டையில் திறம்படச் செயல்பட்டதாக பாகிஸ்தான் சுட்டிக்காட்டியிருந்தது. எனினும், அவற்றின் திறன் குறித்த விவரங்கள் முழுமையாக வெளியிடப்படவில்லை.
இந்த நிலையில், இந்தப் போர் விமானங்கள் கொள்முதல் செய்வது தொடர்பாக, பாகிஸ்தானுடனான சோமாலியாவின் 90 கோடி டாலர் ஒப்பந்தம் விரைவில் கையொப்பமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சோமாலியாவில் தொடா் வறட்சி மற்றும் அதிகரித்து வரும் மோதல்களால் சுமாா் 44 லட்சம் மக்கள் உணவின்றித் தவிக்கின்றனா். இதில் சுமாா் 10 லட்சம் மக்கள் ஒரு வேளை உணவுக்கே வழியின்றி உயிா் பிழைக்கப் போராடி வருவதாக ஐ.நா.வின் உலக உணவுத் திட்டம் அமைப்பு எச்சரித்துள்ளது கவனிக்கத்தக்கது.
Summary
Somalia is negotiating with Pakistan to purchase up to 24 JF-17 Thunder Block III fighter jets, a media report said here Sunday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










