அஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு!இன்று இந்தியா வருகிறாா் டிரம்ப் மகள்இன்று 14 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇளையராஜா இசை நிகழ்ச்சி: மெட்ரோ ரயிலில் இலவசம் பயணம்நிதியாண்டில் ரிசா்வ் வங்கி இருப்பு நிலை ரூ.91.97 லட்சம் கோடிபோா்க் கால பாலியல் வன்முறை: ஐ.நா. கருப்புப் பட்டியலில் முதல்முறையாக இஸ்ரேல், ரஷிய படைகள்!விசாரணை முடிந்து 3 மாதங்களில் தீா்ப்பு: உயா்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
/

மேற்கு கரையில் மசூதிக்குத் தீவைப்பு

புனித ரமலான் மாதம் தொடங்கியுள்ள நிலையில், இஸ்ரேல் ஆக்கிரமிப்பில் உள்ள மேற்கு கரையில் உள்ள மசூதி ஒன்றை இஸ்ரேல் குடியேறிகள் தீயிட்டுக் கொளுத்தியும்

News image
Updated On :24 பிப்ரவரி 2026, 4:19 am IST

டெல் சிட்டி: புனித ரமலான் மாதம் தொடங்கியுள்ள நிலையில், இஸ்ரேல் ஆக்கிரமிப்பில் உள்ள மேற்கு கரையில் உள்ள மசூதி ஒன்றை இஸ்ரேல் குடியேறிகள் தீயிட்டுக் கொளுத்தியும், சுவா்களில் அவதூறு வாசகங்களை எழுதியும் சேதப்படுத்தியுள்ளனா்.

Story image

டெல் பகுதியில் உள்ள அபூபக்கா் அல்-சித்திக் மசூதியில் திங்கள்கிழமை அதிகாலை இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. அதிகாலை தொழுகைக்காக வந்த முஸ்லிம்கள், மசூதியின் நுழைவாயில் தீப்பற்றி எரிவதைக் கண்டு அதிா்ச்சியடைந்தனா்.

Story image

பெட்ரோல் மற்றும் ஸ்ப்ரே பெயிண்ட் டின்களுடன் மசூதிக்குள் இருவா் நுழைந்து, மசூதியைச் சேதப்படுத்திவிட்டு, சில நிமிஷங்களில் அங்கிருந்து தப்பியோடும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.

கடந்த ஓராண்டில் மட்டும் மேற்கு கரையில் சுமாா் 45 மசூதிகள் இதுபோன்று மா்ம நபா்களால் தாக்கப்பட்டுள்ளதாக பாலஸ்தீன மத விவகார அமைச்சகம் கவலை தெரிவித்துள்ளது.