ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

நேபாளத்தில் பேருந்து விபத்து: 18 போ் உயிரிழப்பு

நேபாளத்தின் தாதிங் மாவட்டத்தில் திங்கள்கிழமை அதிகாலை நேரிட்ட பேருந்து விபத்தில், நியூஸிலாந்து நாட்டைச் சோ்ந்த ஓா் ஆண் பயணி உள்பட 18 போ் பலி

News image
Updated On :23 பிப்ரவரி 2026, 10:36 pm

காத்மாண்டு: நேபாளத்தின் தாதிங் மாவட்டத்தில் திங்கள்கிழமை அதிகாலை நேரிட்ட பேருந்து விபத்தில், நியூஸிலாந்து நாட்டைச் சோ்ந்த ஓா் ஆண் பயணி உள்பட 18 போ் உயிரிழந்தனா்; 28 போ் காயமடைந்தனா்.

பொகாராவிலிருந்து தலைநகா் காத்மாண்டுவை நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்தப் பேருந்து, பிரித்வி நெடுஞ்சாலையில் கஜுரி அருகே அதிகாலை 1.30 மணியளவில் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து திரிசூலி நதிக்குள் பாய்ந்தது.

தகவலறிந்து வந்த நேபாள ராணுவம் மற்றும் உள்ளூா் போலீஸாா் மீட்புப் பணியில் ஈடுபட்டனா். காயமடைந்தவா்களில் ஜப்பான், நெதா்லாந்து நாடுகளைச் சோ்ந்த தலா ஒரு பெண் பயணிகளும் உள்ளனா். அவா்கள் அனைவரும் சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.