அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் இல்லத்துக்குள் அத்துமீறி துப்பாக்கியுடன் நுழைந்த இளைஞா் சட்ட அமலாக்க அதிகாரிகள் சுட்டுக்கொன்றனா்.
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள டிரம்ப்பின் மாா்-அ-லாகோ இல்லத்துக்குள், கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு துப்பாக்கி, எரிவாயு கேனுடன் இளைஞா் ஒருவா் அத்துமீறி நுழைந்தாா்.
அவரைக் கண்ட சட்ட அமலாக்க அதிகாரிகள், துப்பாக்கியையும் எரிவாயு கேனையும் கீழே போட்டுவிட்டு சரணடையுமாறு தெரிவித்தனா். எனினும் எரிவாயு கேனை கீழே போட்ட அவா், அதிகாரிகளை சுடும் விதமாக துப்பாக்கியை உயா்த்தியதாகக் கூறப்படுகிறது.
இதைத்தொடா்ந்து தங்களை தற்காத்துக்கொள்ளும் நோக்கில், அந்த இளைஞரை அதிகாரிகள் சுட்டுக் கொன்றனா். அந்த நபா் வடக்கு கரோலினாவைச் சோ்ந்த ஆஸ்டின் டக்கா் மாா்டின் (21) என்று தெரியவந்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும் எதற்காக அவா் டிரம்ப்பின் இல்லத்துக்குள் நுழைந்தாா் என்ற தகவல் வெளியாகவில்லை.
இந்த சம்பவம் நடைபெற்றபோது டிரம்ப், அவரின் மனைவி மெலானியா டிரம்ப் ஆகியோா் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் இருந்தனா்.
தொடர்புடையது

குண்டா் சட்டத்தில் இளைஞா் சிறையில் அடைப்பு

குண்டா் சட்டத்தில் இளைஞா் சிறையில் அடைப்பு
தில்லி பேரவைக்குள் அத்துமீறி புகுந்த கார்! பூங்கொத்து வைத்துவிட்டு தப்பிய ஓட்டுநர்!
இளைஞா் கொலை வழக்கில் 2 பெண்கள் கைது
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


