மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

சீனா: ஜப்பான் நிறுவனங்களுக்கு ஏற்றுமதி கட்டுப்பாடுகள்

இதில் 20 நிறுவனங்கள் கருப்புப் பட்டியலிலும், மற்ற 20 நிறுவனங்கள் கண்காணிப்புப் பட்டியலிலும் சேர்க்கப்பட்டுள்ளன.

News image

உருக்குப் பொருள்கள் ஏற்றுமதி

Updated On :24 பிப்ரவரி 2026, 10:55 pm

ஜப்பானைச் சேர்ந்த 40 முன்னணி நிறுவனங்கள் மீது சீனா கடும் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதில் 20 நிறுவனங்கள் கருப்புப் பட்டியலிலும், மற்ற 20 நிறுவனங்கள் கண்காணிப்புப் பட்டியலிலும் சேர்க்கப்பட்டுள்ளன.

ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சியின் தைவான் ஆதரவு நிலைப்பாட்டால், சீனா}ஜப்பான் உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்நிலையில், மிட்சுபிஷி, கவாசாகி உள்ளிட்ட 20 ஜப்பான் நிறுவனங்களுக்கு ராணுவ மற்றும் சிவில் பயன்பாட்டுக்குத் தேவையான பொருள்களை விற்க சீன நிறுவனங்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இந்த நிறுவனங்களுடன் தற்போது நிலுவையில் உள்ள வர்த்தக நடவடிக்கைகளையும் உடனடியாக முடித்துக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

மற்ற 20 நிறுவனங்களுக்குப் பொருள்களை ஏற்றுமதி செய்ய வேண்டுமெனில், சீன நிறுவனங்கள் இனி தனித்தனியாக விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும். ஜப்பானின் ராணுவ விரிவாக்கத்தைக் கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.