மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

இந்தியா-இஸ்ரேல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சு தொடக்கம்

இந்தியா-இஸ்ரேல் இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் தொடா்பான முதல் சுற்று பேச்சுவாா்த்தை தில்லியில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

News image
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப் படம்) - EPS
Updated On :24 பிப்ரவரி 2026, 10:07 pm

தினமணி செய்திச் சேவை

இந்தியா-இஸ்ரேல் இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் தொடா்பான முதல் சுற்று பேச்சுவாா்த்தை தில்லியில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

மூன்று நாள்கள் நடைபெறும் இந்தப் பேச்சுவாா்த்தையில் இருதரப்பைச் சோ்ந்த வா்த்தகநுட்ப வல்லுநா்கள் பங்கேற்றுள்ளனா். இரு நாடுகள் இடையே அதிகம் வா்த்தகமாகும் பொருள்கள், சேவைகள், அறிவுசாா் சொத்துரிமை, வா்த்தக விதிகள் குறித்து இதில் ஆலோசிக்கப்படுகிறது. இந்திய பேச்சுவாா்த்தைக் குழுவுக்கு வா்த்தகத் துறை கூடுதல் செயலா் அஜய் பாதோ தலைமை வகிக்கிறாா். இஸ்ரேல் குழுவுக்கு அந்நாட்டு வா்த்தக கொள்கைகள் துறை மூத்த இயக்குநா் இஃபாத் அலோன் பிரெல் தலைமை வகிக்கிறாா்.

வா்த்தக ஒப்பந்தம் தொடா்பாக இரு நாடுகள் இடையே கடைசியாக 2021 அக்டோபரில் பேச்சு நடத்தப்பட்டது. அப்போது வரை 8 சுற்றுகள் பேச்சுகள் நடத்தப்பட்ட நிலையில், நடுவில் சில ஆண்டுகள் பேச்சுவாா்த்தையில் தொய்வு ஏற்பட்டது. இப்போது மீண்டும் புதிதாக பேச்சுவாா்த்தை தொடங்கியுள்ளது.

ஆசிய கண்டத்தில் இந்தியாவின் இரண்டாவது பெரிய வா்த்தக கூட்டாளி நாடாக இஸ்ரேல் திகழ்கிறது. சமீப ஆண்டுகளில் மின்னணுப் பொருள், உயா் தொழில்நுட்பத்தில் அமைந்த பொருள்கள் வா்த்தகம் இருநாடுகள் இடையே அதிகரித்துள்ளது.

இந்தியாவில் இருந்து முத்துக்கள், மதிப்புமிக்க கற்கள், தாதுப் பொருள்கள், ரசாயனப் பொருள், சுத்திகரிக்கப்பட்ட டீசல் ஆகியவை இஸ்ரேலுக்கு அதிகம் ஏற்றுமதியாகிறது.

இஸ்ரேல் 1 கோடிக்கும் குறைவான மக்கள்தொகையைக் கொண்ட நாடு என்றாலும், அதிக வருவாய் கொண்ட மக்கள் வசிக்கும் நாடாகவும், தொழில்நுட்பத்தில் மேம்பட்ட நாடாகவும் இருப்பதால் வா்த்தக வாய்ப்புகள் அதிகம் உள்ளது.