‘சோஃபா மாடல் ஆட்சியில், போலீஸாலயும் போலீசுக்குமே பாதுகாப்பு இல்லை’ - உதயநிதிசிபிஎஸ்இ குளறுபடிகளுக்கு நானே பொறுப்பேற்கிறேன்... மௌனம் கலைத்தார் தர்மேந்திர பிரதான்!கோடை வெய்யில்! தவெகவினர் நீர்மோர்ப் பந்தல் திறக்க அமைச்சர் ஆனந்த் வேண்டுகோள்!தமிழகத்தில் உரம் விலை திடீர் உயர்வு!வைகாசி சுபமுகூர்த்த நாள்: சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு வில்லைகள்!
/

அமெரிக்கா: வரிப் பணத்தை திரும்ப தரக் கோரி நிறுவனங்கள் வழக்கு

வரிப்பணத்தை முழுமையாகத் திரும்பத் தரக் கோரி ஃபெட்எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்துள்ளது.

News image

அனைத்து நாடுகளுக்கும் புதிதாக 10% வரி விதிப்பு அமல்படுத்திய டிரம்ப் - படம் - ஏபி

Updated On :25 பிப்ரவரி 2026, 4:23 am IST

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பரஸ்பர இறக்குமதி வரி விதிப்பு அந்நாட்டு உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தாங்கள் செலுத்திய வரிப்பணத்தை முழுமையாகத் திரும்பத் தரக் கோரி ஃபெட்எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்துள்ளது.

அமெரிக்காவின் சர்வதேச வர்த்தக நீதிமன்றத்தில் ஃபெட்எக்ஸ் தாக்கல் செய்த மனுவில், வரிகளைச் செலுத்தியதால் தங்களின் நிறுவனம் பெரும் நிதி பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாகவும், அந்த இழப்பை ஈடுகட்ட வரிப்பணத்தைத் திருப்பியளிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

ரத்தான வரிகள் மூலம் அமெரிக்க கருவூலத்துக்கு பல்லாயிரம் கோடி டாலர் வருவாய் கிடைத்துள்ள நிலையில், ஃபெட்எக்ஸ் நிறுவனத்தைத் தொடர்ந்து காஸ்ட்கோ, ரெவ்லான் போன்ற பிற முன்னணி நிறுவனங்களும் நீதிமன்றத்தை நாடத் திட்டமிட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.