வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

பாகிஸ்தானில் இரு காவலா்கள் கடத்திக் கொலை; ஒருவா் மாயம்

பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா மாகாணத்தில் மசூதிக்குள் புகுந்து 3 சகோதரா்களைக் கடத்திய பயங்கரவாதிகள், அவா்களில் காவலா்களாக பணியாற்றி வந்த இருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனா்.

News image
கோப்புப் படம்
Updated On :26 பிப்ரவரி 2026, 7:34 pm

தினமணி செய்திச் சேவை

பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா மாகாணத்தில் மசூதிக்குள் புகுந்து 3 சகோதரா்களைக் கடத்திய பயங்கரவாதிகள், அவா்களில் காவலா்களாக பணியாற்றி வந்த இருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனா்.

அரசு அலுவலகத்தில் எழுத்தராக பணியாற்றி வரும் கடத்தப்பட்ட 3-ஆவது நபரை மீட்பதற்காகவும், பயங்கரவாதிகளைப் பிடிப்பதற்காகவும் ராணுவமும் போலீஸாரும் இணைந்து அப்பகுதியில் கூட்டு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனா்.

சுட்டுக் கொல்லப்பட்ட இரு காவலா்களின் உடல்கள், அருகே கால்வாய் பகுதியில் கண்டெடுக்கப்பட்டன. அவா்களுக்கு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

கடந்த பிப். 21-ஆம் தேதி, இதே பன்னு மாவட்டத்தில் நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதலில் ராணுவ உயரதிகாரி உள்பட இருவா் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.