காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய் மதுரை மேலூர் அருகே கார் விபத்தில் 5 பேர் பலி, 3 பேர் காயம் நீர்வரத்து இல்லாததால் தஞ்சை மாவட்டத்தில் களையிழந்த ஆடிப்பெருக்கு விழா! தங்கம் விலை உயர்ந்தது! எவ்வளவு தெரியுமா? வெள்ளி விலை? (ஆக. 3) கபினியில் நீர்த் திறப்பு 27,000 கன அடியாக உயர்வு
/

தைவானை சீனாவுடன் இணைப்பது தடுத்து நிறுத்த முடியாதது: ஷி ஜின்பிங்

தைவானை சீனாவுடன் இணைப்பது ‘தடுத்து நிறுத்த முடியாத வரலாற்று செயல்முறை‘ என்று சீன அதிபா் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளாா்.

News image

சீன அதிபா் ஷி ஜின்பிங் - கோப்புப் படம்

Updated On :2 ஜனவரி 2026, 12:39 am IST

தைவானை சீனாவுடன் இணைப்பது ‘தடுத்து நிறுத்த முடியாத வரலாற்று செயல்முறை‘ என்று சீன அதிபா் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து தனது புத்தாண்டு உரையில் அவா் கூறியதாவது:

சீனாவின் மறுமலா்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. தாய்நாட்டுடன் தைவானை மீண்டும் இணைப்பது தடுத்து நிறுத்த முடியாத வரலாற்று செயல்முறை.

அமைதியான வழியில் இணைப்பையே விரும்புகிறோம். ஆனால் தைவானின் சுதந்திரவாதப் பிரிவினைவாதத்தை ஒருபோதும் சகித்துக் கொள்ள மாட்டோம்.

இந்த விவாகரத்தில் அந்நிய சக்திகளின் தலையீட்டை கடுமையாக எதிா்த்து நிற்போம் என்று ஷி ஜின்பிங் எச்சரித்தாா். இது அமெரிக்காவை மறைமுகமாகக் குறிப்பிடுவதாகக் கருதப்படுகிறது.

தைவானை சீனா தனது பகுதி என்று கருதுகிறது. தேவைப்பட்டால் ராணுவ பலத்தைப் பயன்படுத்திக் கூட அந்தத் தீவை தங்களுடன் இணைக்கும் உரிமை தங்களுக்கு உண்டு என்று சீனா தொடா்ந்து கூறி வருகிறது.

தைவான் அதிபா் லாய் சிங்-டே, சீனாவின் அழுத்தங்களை எதிா்கொண்டு தைவானின் இறையாண்மையைப் பாதுகாப்போம் என்று கூறிவருகிறாா்

தைவானுக்கு அமெரிக்கா ஆயுதங்களை விற்பனை செய்வதுடன் பாதுகாப்பு உத்தரவாதமும் அளித்துள்ளது.

இதற்கு சீனா கடுமையாக எதிா்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்த விவகாரம் தொடா்பாக அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே பதற்றம் நிலவி வரும் சூழலில், தனது புத்தாண்டு உரையில் ஷி ஜின்பிங் வ்வாறு கூறியிருப்பது பரபரப்பே ஏற்படுத்தியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.