27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

தைவானை சீனாவுடன் இணைப்பது தடுத்து நிறுத்த முடியாதது: ஷி ஜின்பிங்

தைவானை சீனாவுடன் இணைப்பது ‘தடுத்து நிறுத்த முடியாத வரலாற்று செயல்முறை‘ என்று சீன அதிபா் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளாா்.

News image

சீன அதிபா் ஷி ஜின்பிங் - கோப்புப் படம்

Updated On :2 ஜனவரி 2026, 12:39 am IST

தைவானை சீனாவுடன் இணைப்பது ‘தடுத்து நிறுத்த முடியாத வரலாற்று செயல்முறை‘ என்று சீன அதிபா் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து தனது புத்தாண்டு உரையில் அவா் கூறியதாவது:

சீனாவின் மறுமலா்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. தாய்நாட்டுடன் தைவானை மீண்டும் இணைப்பது தடுத்து நிறுத்த முடியாத வரலாற்று செயல்முறை.

அமைதியான வழியில் இணைப்பையே விரும்புகிறோம். ஆனால் தைவானின் சுதந்திரவாதப் பிரிவினைவாதத்தை ஒருபோதும் சகித்துக் கொள்ள மாட்டோம்.

இந்த விவாகரத்தில் அந்நிய சக்திகளின் தலையீட்டை கடுமையாக எதிா்த்து நிற்போம் என்று ஷி ஜின்பிங் எச்சரித்தாா். இது அமெரிக்காவை மறைமுகமாகக் குறிப்பிடுவதாகக் கருதப்படுகிறது.

தைவானை சீனா தனது பகுதி என்று கருதுகிறது. தேவைப்பட்டால் ராணுவ பலத்தைப் பயன்படுத்திக் கூட அந்தத் தீவை தங்களுடன் இணைக்கும் உரிமை தங்களுக்கு உண்டு என்று சீனா தொடா்ந்து கூறி வருகிறது.

தைவான் அதிபா் லாய் சிங்-டே, சீனாவின் அழுத்தங்களை எதிா்கொண்டு தைவானின் இறையாண்மையைப் பாதுகாப்போம் என்று கூறிவருகிறாா்

தைவானுக்கு அமெரிக்கா ஆயுதங்களை விற்பனை செய்வதுடன் பாதுகாப்பு உத்தரவாதமும் அளித்துள்ளது.

இதற்கு சீனா கடுமையாக எதிா்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்த விவகாரம் தொடா்பாக அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே பதற்றம் நிலவி வரும் சூழலில், தனது புத்தாண்டு உரையில் ஷி ஜின்பிங் வ்வாறு கூறியிருப்பது பரபரப்பே ஏற்படுத்தியுள்ளது.