பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!

ஆப்பிள், கூகுள், மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களும் அந்தப் பட்டியலில்...

News image

Center-Center-Delhi

Updated On :31 மார்ச் 2026, 10:15 pm IST

அமெரிக்காவைச் சார்ந்த பெரும் தொழில்நுட்ப மற்றும் தொழில்துறை நிறுவனங்களைக் குறிவைத்து ஏப். 1 முதல் தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் புரட்சிகர காவல் படை அச்சுறுத்தல் விடுத்துள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலுக்குப் பதிலடியாக, வளைகுடா நாடுகளில் இருக்கும் அமெரிக்க ராணுவ நிலைகள் அமைந்துள்ள இடங்கள் மீது ஈரான் ஏவுகணைகள், ட்ரோன்களை வீசி தாக்கி வருகிறது. அதேபோல், ஈரானிலுள்ள உட்கட்டமைப்புகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டால், அதற்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து ஈரான் தாக்கி வருகிறது.

இந்நிலையில், இஸ்ரேல், அமெரிக்கத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஈரான் மீதான தாக்குதல்களில் அமெரிக்கா ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதாகச் சுட்டிக்காட்டி, இதையடுத்து இனிமேல் இந்நிறுவனங்களே தங்களது முதன்மை இலக்குகளாகத் தாக்கப்படும் என்று ஈரான் தெரிவித்துள்ளது.

அவர்கள் வெளியிட்டுள்ள 18 நிறுவனங்களின் பட்டியலில் மைக்ரோசாஃப்ட், கூகுள், ஆப்பிள், இண்டெல், ஐபிஎம், டெஸ்லா, போயிங் உள்பட முக்கிய பெரு நிறுவனங்களும் அடங்கும். ஈரானிய நேரப்படி, ஏப். 1 இரவு 8 மணியிலிருந்து(இந்திய நேரப்படி இரவு 10 மணி) தாக்குதல்கள் ஆரம்பமாகும் என்றும் மிரட்டல் விடுத்துள்ளது ஈரான். ஆகவே, அங்குள்ள ஊழியர்கள் உடனடியாக வெளியேறுமாறும் அறிவுறுத்தியுள்ளது ஈரான்.

Summary

Iran says it will target American IT companies if US continues to attack their infrastructure.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.