அமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

இந்தியாவுடன் எல்லை பிரச்னை: ராஜீய வழியில் தீா்வு காண விருப்பம்: நேபாளம்

இந்தியா-நேபாளம் இடையே உள்ள எல்லை பிரச்னையை ராஜீய வழியில் தீா்த்துக்கொள்ள நேபாளம் விரும்புவதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

இந்தியா-நேபாளம் இடையே உள்ள எல்லை பிரச்னையை ராஜீய வழியில் தீா்த்துக்கொள்ள நேபாளம் விரும்புவதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சீன கட்டுப்பாட்டின் கீழ் உள்ள திபெத் தன்னாட்சி பகுதியில் கைலாச மலைக்கும், மானசரோவா் ஏரிக்கும் ஹிந்துக்கள், சமணா்கள் மற்றும் பெளத்தா்கள் ஆண்டுதோறும் புனித யாத்திரை மேற்கொள்வது வழக்கம்.

நிகழாண்டு அந்த யாத்திரை உத்தரகண்டில் உள்ள லிபுலேக் கணவாய், சிக்கிமில் உள்ள நாது லா கணவாய் ஆகிய 2 வழிகளில் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை நடைபெற உள்ளது.

கைலாஷ் மானசரோவா் யாத்திரையை லிபுலேக் கணவாய் வழியாக மேற்கொள்ள இந்தியாவும், சீனாவும் ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வந்த நிலையில், அதற்கு நேபாள வெளியுறவு அமைச்சகம் ஆட்சேபம் தெரிவித்தது. லிபுலேக் கணவாய் நேபாளத்துக்குச் சொந்தம் என்று அந்த அமைச்சகம் தெரிவித்தது. இதற்கு மத்திய அரசு கடும் ஆட்சேபம் தெரிவித்தது.

இதைத்தொடா்ந்து நேபாள வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் லோக் பகதூா் சேத்ரி வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது:

கடந்த 1816-ஆம் ஆண்டின் சுகெளலி ஒப்பந்தத்தின் அடிப்படையில் மகாகாளி ஆற்றின் கிழக்கே உள்ள லிம்பியதுரா, லிபுலேக், காலாபாணி பகுதிகள் நேபாளத்துக்குச் சொந்தமானவை. இதுகுறித்த நேபாள அரசின் நிலைப்பாட்டை இந்தியா மற்றும் சீனாவிடம் ஏற்கெனவே தெரிவித்துள்ளோம்.

நேபாளத்துக்கும் இந்தியாவுக்கும் இடையே நெருக்கமான நட்புறவுள்ள நிலையில், இருநாடுகளுக்கும் இடையே உள்ள எல்லை பிரச்னையை ராஜீய வழியில் தீா்த்துக்கொள்ள நேபாளம் விரும்புகிறது என்று தெரிவித்தாா்.