இந்தியா-நேபாளம் இடையே உள்ள எல்லை பிரச்னையை ராஜீய வழியில் தீா்த்துக்கொள்ள நேபாளம் விரும்புவதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சீன கட்டுப்பாட்டின் கீழ் உள்ள திபெத் தன்னாட்சி பகுதியில் கைலாச மலைக்கும், மானசரோவா் ஏரிக்கும் ஹிந்துக்கள், சமணா்கள் மற்றும் பெளத்தா்கள் ஆண்டுதோறும் புனித யாத்திரை மேற்கொள்வது வழக்கம்.
நிகழாண்டு அந்த யாத்திரை உத்தரகண்டில் உள்ள லிபுலேக் கணவாய், சிக்கிமில் உள்ள நாது லா கணவாய் ஆகிய 2 வழிகளில் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை நடைபெற உள்ளது.
கைலாஷ் மானசரோவா் யாத்திரையை லிபுலேக் கணவாய் வழியாக மேற்கொள்ள இந்தியாவும், சீனாவும் ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வந்த நிலையில், அதற்கு நேபாள வெளியுறவு அமைச்சகம் ஆட்சேபம் தெரிவித்தது. லிபுலேக் கணவாய் நேபாளத்துக்குச் சொந்தம் என்று அந்த அமைச்சகம் தெரிவித்தது. இதற்கு மத்திய அரசு கடும் ஆட்சேபம் தெரிவித்தது.
இதைத்தொடா்ந்து நேபாள வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் லோக் பகதூா் சேத்ரி வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது:
கடந்த 1816-ஆம் ஆண்டின் சுகெளலி ஒப்பந்தத்தின் அடிப்படையில் மகாகாளி ஆற்றின் கிழக்கே உள்ள லிம்பியதுரா, லிபுலேக், காலாபாணி பகுதிகள் நேபாளத்துக்குச் சொந்தமானவை. இதுகுறித்த நேபாள அரசின் நிலைப்பாட்டை இந்தியா மற்றும் சீனாவிடம் ஏற்கெனவே தெரிவித்துள்ளோம்.
நேபாளத்துக்கும் இந்தியாவுக்கும் இடையே நெருக்கமான நட்புறவுள்ள நிலையில், இருநாடுகளுக்கும் இடையே உள்ள எல்லை பிரச்னையை ராஜீய வழியில் தீா்த்துக்கொள்ள நேபாளம் விரும்புகிறது என்று தெரிவித்தாா்.
தொடர்புடையது

கைலாஷ்-மானசரோவா் யாத்திரை: லிபுலேக் வழித்தடத்தில் செல்ல நேபாளம் அனுமதி மறுப்பு

பெட்ரோல், டீசல் விலையை உயா்த்தும் திட்டமில்லை -மத்திய அரசு விளக்கம்

2,775 வாக்குச்சாவடிகளின் வாக்குப்பதிவு இணையவழியில் நேரலை ஒளிபரப்பு: பச்சைமலையில் 12 வாக்குச்சாவடிகளில் விடியோ பதிவு

இந்தியாவுடன் உறவை மேம்படுத்தும் கொள்கையில் மாற்றமில்லை - சீனா அறிவிப்பு
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

