சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம்

தருமபுரி அருகேயுள்ள அன்னசாகரம் சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத்தையொட்டி புதன்கிழமை திருத்தேரோட்டம் நடைபெற்றது.

தருமபுரி அருகேயுள்ள அன்னசாகரம் சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத்தையொட்டி புதன்கிழமை திருத்தேரோட்டம் நடைபெற்றது.

அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக் கோயிலில் மார்ச் 16-ஆம் தேதி கொடியேற்றத்துடன் பங்குனி உத்திர திருவிழா தொடங்கியது. மார்ச் 21-ஆம் தேதி காலை பால்குடம் ஏந்தி ஊர்வலமாக பக்தர்கள் வந்தனர். இதையடுத்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து, அன்று மாலை வள்ளி, தெய்வானை சமேத சிவசுப்பிரமணியருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

இதில், புதன்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் சுவாமி ரதம் ஏறுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து, பெண் பக்தர்கள் மட்டும் பங்கேற்று வடம் பிடித்து இழுத்து தேரை நிலை பெயர்த்தனர். இதேபோல, மாலை 6 மணிக்கு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரை பக்தர்கள் வடம் பிடித்து முக்கிய வீதிகள் வழியாக இழுத்துச் சென்றனர். மேலும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழா, வரும் மார்ச் 27-ஆம் தேதி விடையாற்றி உற்சவத்துடன் நிறைவு பெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com