சுப்பிரமணிய சிவா சர்க்கரை ஆலை வளாகத்தில் தீ விபத்து

அரூரை அடுத்த கோபாலபுரத்தில் உள்ள சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து நேரிட்டது.
Updated on
1 min read

அரூரை அடுத்த கோபாலபுரத்தில் உள்ள சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து நேரிட்டது.
 பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கோபாலபுரத்தில் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலையில் நிகழாண்டு கரும்பு அரைவைப் பணிகள் கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வருகின்றன. கரும்பு அரைவையின் போது வெளியாகும் சக்கைகள், கழிவுகள் ஆலை வளாகத்தில் கொட்டி வைக்கப்பட்டுள்ளன.
 இந்த நிலையில், கரும்பு சக்கைகள் திடீரென தீப்பிடித்துள்ளது. தகவல் அறிந்து வந்த அரூர் மற்றும் தருமபுரி தீயணைப்பு நிலைய வீரரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
 கரும்பு சக்கைகளில் ஏற்பட்ட தீ, துணை மின்நிலையம் அமைக்க வைக்கப்பட்டிருந்த இரும்புத் தளவாடங்கள் மீதும் பரவியதாகக் கூறப்படுகிறது. இந்தத் தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான மின் சாதனப் பொருள்கள் எரிந்து நாசமாகின.
 சம்பவ இடத்தில் ஆலையின் மேலாண்மை இயக்குநர் ச.கவிதா தலைமையில், சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் தீத்தடுப்புப் பணியில் ஈடுபட்டனர். இந்தத் தீ விபத்தினால் சர்க்கரை ஆலையின் கரும்பு அரைவைப் பணிகள் ஏதும் பாதிக்கப்படவில்லை என்று நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com