லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!தமிழக உள்துறை செயலர் மாற்றம்! மணிவாசன் நியமனம்நாளை (ஏப். 12) தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி?ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால் விமானத்தில் சிக்கிய 2 கிலோ தங்கம்! சுவாரசியம்10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்!ராகுல் காந்தியுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள்: குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
/

எள் சாகுபடியில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்

காரைக்காலில் பரவலான பகுதியில் கோடைகாலப் பயிரான எள் சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.

News image
Updated On :21 மார்ச் 2017, 7:28 am

காரைக்காலில் பரவலான பகுதியில் கோடைகாலப் பயிரான எள் சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.
 காரைக்கால் பகுதியில் பொதுவாக நெல் சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டும் விவசாயிகள், கோடைகாலப் பயிர் வகைகள் சாகுபடியில் போதிய ஆர்வம் காட்டுவதில்லை. சம்பா பருவ நெல் அறுவடைக்குப் பின்னர் உளுந்து, பயறு, பருத்தி ஆகியவற்றை விதைக்கின்றனர்.
 கடந்த 2, 3 ஆண்டுகளாக காரைக்கால் மாவட்டத்தில் பரவலாக எள் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். நிகழாண்டு கூடுதலான நிலப்பரப்பில் எள் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.
 தற்போது காரைக்கால் மாவட்டத்தின் கிழக்குப் பகுதியில் குறிப்பாக கோட்டுச்சேரிக்கு கிழக்கே சுமார் 500 ஹெக்டேரில் எள் பயிரிட்டுள்ளனர். இதுகுறித்து  கோட்டுச்சேரி பகுதியை சேர்ந்த எள் சாகுபடியாளர் முருகையன் கூறியது:  எள் 90 நாள் பயிர். கடற்கரைப் பகுதியில் ஒரு ஏக்கரில் எள் சாகுபடி செய்கிறேன். இந்த பிராந்தியத்தில் பெரும்பாலான விவசாயிகள் தலா ஒரு ஏக்கரில் எள் சாகுபடி செய்கின்றனர். பலர், உளுந்து பயிரிட்டுள்ளனர்.
 ஒரு ஏக்கருக்கு 2 கிலோ எள் விதை போதுமானது. ஏக்கருக்கு 100 கிலோ மகசூல் கிடைக்கும். தற்போதைய காலகட்டத்தில் 100 கிலோ ரூ.6 ஆயிரம் விலையில் எள் கொள்முதல் செய்யப்படுகிறது.   பயிர் தொடக்க காலத்தில் தரப்படும் தண்ணீர் போதுமானது. கடந்த 4-ஆம் தேதி காரைக்காலில் பெய்த மழை எள் சாகுபடிக்கு ஏற்புடையதாகிவிட்டது. கோடை வெயிலில் இது நல்ல மகசூலை தரும். இங்கு அறுவடை செய்யும் எள், காரைக்காலில் உள்ள எண்ணெய் ஆலைக்கு விற்பனை செய்துவிடுவோம்.  எள் போன்ற கோடைகாலப் பயிர்களை வரும் ஆண்டிலிருந்து கூடுதலாக பயிரிட  திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.