நடிகை ஓவியா ‘பிக் பாஸ்’ போட்டியிலிருந்து சில நாட்களுக்கு முன் தனக்குத் தானே எலிமினேட் செய்து கொண்டு விலகிக் கொண்டார். அதற்கு காரணமாக அவர் கூறியது. இது வரை தான் அங்கிருந்த நாட்களே போதும்... இனி அங்கிருக்கும் சக போட்டியாளர்களின் புறக்கணிப்பையும், வெறுப்பையும் சகித்துக் கொண்டு தன்னால் அங்கிருக்க முடியுமென்று தோன்றவில்லை. அவர்களால், தான் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக வாய்ப்பிருப்பதாலும், மற்றொரு போட்டியாளரான ஆரவ் மீது தனக்கிருந்த காதலை அவர் ஏற்றுக் கொள்ளாததால் உண்டான காதல் தோல்வியாலும் தனக்கு அங்கே தொடர்ந்து இருக்க விருப்பமில்லை என்று கூறி பிக் பாஸ் வீட்டிலிருந்து ஓவியா வெளியேறினார். ஓவியா வெளியேறும் வரை, அவரது ரசிகர்கள் மட்டுமல்ல பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்த லட்சோப லட்சம் நேயர்களும் கூட அவரே அப்போட்டியில் வென்று 50 லட்ச ரூபாய் பரிசுத் தொகையைப் பெறப்போகிறார் என அழுத்தமாக நம்பினர்.
திடீரென்று ஓவியா போட்டியிலிருந்து விலகிக் கொண்டார் என்றதும் அது அனைவருக்குமே ஏமாற்றமாகவே இருந்தது. ஓவியா வெளியேறிய பின்பும் கூட, வைல்டு கார்டு ரவுண்ட் மூலம் அவர் பிக் பாஸ் வீட்டுக்குள் மீண்டும் நுழைவார் என்றே ஓவியா ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து வந்தனர். ஆனால் இன்று ஓவியா தெரிவித்ததாக வெளிவந்திருக்கும் செய்தியொன்றில், அவர் திட்டவட்டமாகத் தெரிவித்திருப்பது என்னவெனில், வைல்டு கார்டு ரவுண்ட் மூலமாகக் கூட மீண்டும் பிக் பாஸில் கலந்து கொள்ளும் எண்ணம் தனக்கு இல்லை என அவர் அறிவித்திருக்கிறார். தனது ரசிகர்களை இனி பிக் பாஸ் மூலமாக அல்ல; வெளிவரவிருக்கும் தனது புதிய திரைப்படங்கள் மூலமாகவே தான் சந்திக்கவிருப்பதாகவும் ஓவியா கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறியதிலிருந்து; தற்போது பிக் பாஸ் வீட்டிலிருக்கும் பிற போட்டியாளர்களில் சிலரை, தனது ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருவதை, தான் சமூக ஊடகங்களில் கண்டு வருவதாகவும், ரசிகர்களின் அத்தகைய செயல், தனக்கு மிகுந்த மன வருத்தத்தை அளித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பிக் பாஸ் வீட்டிலிருக்கையில் அவர்களால்... தான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானது உண்மையெனினும் போட்டியிலிருந்து வெளியேறிய பின்; தான் அதைப் பெரிது படுத்த விரும்பவில்லை எனவும், அதனால் தனது ரசிகர்கள் பிற போட்டியாளர்களைக் கடுமையாக விமர்சிப்பது தனக்கு மிகுந்த மன வருத்தத்தை அளிப்பதாகவும், தயவு செய்து ரசிகர்கள் அவற்றை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் ஓவியா தனது ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஃபோட்டோ ஷூட் என்றால் அவருக்கு லட்டு மாதிரி; ஆனால் இவருக்கு ரொம்பத் தயக்கம்! யார் அந்த அவர், இவர்?!
சன்னி லியோனை நேரில் பார்க்க ஆயிரக்கணக்கில் திரண்ட கொச்சி ரசிகர்கள்! (வீடியோ)
சுஜாவுக்குப் பிறகு பிக் பாஸுக்குள் நுழைந்த மற்றொரு புதிய வரவு!
பொது இடத்தில் தன்னுடன் செல்ஃபி எடுத்துக் கொள்ள முயன்ற ரசிகருக்குப் ‘பளார்’ விட்ட பாலகிருஷ்ணா!
‘மாட்டுக்கு நான் அடிமை’ திரைப்படத்தில் அறிமுகமாகும் புதுமுக நடிகர் சாம்பார் ராசன்!