தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை சரண்யா மோகன் 2015ம் வருடம் செப்டம்பரில் திருமணம் செய்துகொண்டார். திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மருத்துவர் அரவிந்த் கிருஷ்ணனை அவர் திருமணம் செய்தார்.
சரண்யாவுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் நடிகை சரண்யா மோகனின் சில புகைப்படங்கள் கேலிக்கும் விமரிசனங்களும் ஆளாகியுள்ளன. குழந்தை பிறந்த சமயத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் அவர் கூடுதல் எடையுடன் இருந்தார். இருப்பினும் அத்தகைய புகைப்படங்களைத் தொடர்ந்து தனது ஃபேஸ்புக்கில் அவர் வெளியிட்டு வருகிறார். அந்தப் புகைப்படங்களை வைத்துக்கொண்டு சமூகவலைத்தளங்களில் கேலியும் விமரிசனங்களும் உருவாகியுள்ளன.
இதையடுத்து ஃபேஸ்புக்கில் அதற்கு விளக்கம் அளித்துள்ளார் சரண்யா மோகன். அவர் கூறியதாவது:
தாய்மையே மகிழ்ச்சி, என் மகனுக்கு அமுதூட்டுவது மகிழ்ச்சி, என் குடும்பத்தைக் கவனித்துக்கொள்வது மகிழ்ச்சி... அதில் நான் பெருமைப்படுகிறேன் ...என்று தனது குழந்தையுடன் உள்ள புகைப்படத்தை வெளியிட்டுப் பதில் அளித்துள்ளார்.