பார்வையாளர்களை எரிச்சலுக்கு உள்ளாக்கியும், சுவாரஸ்யப்படுத்தியும், அபூர்வமாக நெகிழ்ச்சி அடையச் செய்தும் என ஏதோ ஒருவகையில் ரசிகர்களைத் தக்க வைத்துக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்நிகழ்ச்சி முடிய இரண்டே நாட்களில் உள்ள நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப் போகும் நபர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. கமல் கடந்த வார நிகழ்ச்சியில் வீட்டிலிருந்து ஒருவர் வெளியேற்றப்படுவார் எனக் கூறியிருந்தார். புரொமோவிலும் ஒருவர் வீட்டை விட்டு வெளியேறுவதாகக் காண்பிக்கப்பட்டது, ஆனால் அவர் யார் எனச் சரியாகத் தெரியவில்லை.
பிக் பாஸ் நிகழ்ச்சியை இத்தனை நாட்கள் பொறுமையாகப் பார்த்துவிட்ட ரசிகர்கள் என்ன தான் ஆகிறது யார் தான் டைட்டில் வின்னர் என்பதையும் காண ஆவலாக உள்ளனர். இந்நிலையில் இந்த வெளியேற்றக் காணொலியைப் பார்த்த ரசிகர்கள் பிந்து அல்லது ஹரிஷ் இருவரில் ஒருவர் வெளியேறக் கூடும் என்று கருதுகின்றனர்.