ஹைதராபாத்: ஆந்திராவில் காரிலிருந்து இறங்கி நடுரோட்டில் ரசிகர்களை நடிகர் சூர்யா எச்சரித்த விடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
நடிகர் சூர்யா இயல்பிலேயே பொது இடங்களில் அமைதியான அணுகுமுறையை கடைப்பிடிக்கக் கூடியவர். அத்துடன் தன்னுடைய ரசிகர்கள் மீது பேரன்பு கொண்டவர். ஆனால் அவரே ரசிகர்கள் மீது கோபப்பட்ட சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அதுதொடர்பான விடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சமீபத்தில் தனது திரைப்படம் தொடர்பான ஒரு நிகழ்ச்சிக்காக நடிகர் சூர்யா ஆந்திரா சென்றிருந்தார். நிகழ்ச்சியைத் முடித்து விட்டு சூர்யா தனது காரில் ஹோட்டல் நோக்கி சென்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது காரின் பின்னால் பைக்கில் வந்த ரசிகர்கள் அதி வேகத்தில் சூர்யாவின் காரை பின் தொடர்ந்திருக்கிறார்கள்.
இதனால் அதிருப்தியடைந்த சூர்யா தனது காரை நடு ரோட்டில் நிறுத்தி இறங்கி வந்து பைக்குகளில் பின்தொடர்ந்த ரசிகர்களைக் கண்டித்துள்ளார். பைக்கை வேகமாக ஓட்ட வேண்டாம் எனவும், அவர்களது உயிர் முக்கியம் எனவும் அறிவுரை கூறியிருக்கிறார்.
சூர்யாவின் இந்த வீடியோவானத்து தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
வீடியோ: