நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
நமது வாசகசாலை இலக்கிய அமைப்பின் சார்பில் கடந்த இரண்டு வருடங்களாக சிறந்த படைப்புகளுக்கு தமிழ் இலக்கிய விருதுகள் வழங்கப்பட்டு வருவது நீங்கள் அறிந்த ஒன்றே!
அந்த வகையில் இந்த வருடமும் வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள வாசகசாலையின் "முப்பெரும் விழா" மேடையில், இவ்வருடத்திற்கான 'தமிழ் இலக்கிய விருதுகள்' வழங்கப்படவுள்ளன. கடந்த வருடம் சிறந்த கவிதைத் தொகுப்பு, சிறந்த கட்டுரைத் தொகுப்பு, சிறந்த நாவல் மற்றும் சிறந்த சிறுகதைத் தொகுப்பு ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டது. இம்முறை அவற்றோடு 'சிறந்த அறிமுக எழுத்தாளர்' என்ற பிரிவையும் சேர்த்து மொத்தம் ஐந்து பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படவுள்ளது.
விருது பெறும் படைப்பாளிகளுக்கு விருதோடு சேர்த்து ரூபாய் 5000 பரிசுத் தொகையும் வழங்கப்படும்.
முழுக்க தேர்ந்த வாசகர்களை மட்டுமே கொண்ட தேர்வுக்குழுவின் மூலம், நமக்கு அனுப்பப்படும் அனைத்து படைப்புகளையும் படித்து விவாதித்து, நேர்மையான முறையில் வாசகர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வழங்கப்படும் விருதுகள் என்பதே வாசகசாலை தமிழ் இலக்கிய விருதுகளின் தனிச்சிறப்பு..!
இவ்விருதுகளுக்கு உங்களது படைப்புகளை அனுப்புவதற்கான விதிமுறைகள் கீழே...
முக்கிய குறிப்பு:
இவ்விருதுகளுக்காக வாசகசாலைக்கு அனுப்பப்படும் புத்தகங்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இவ்வாறு அனுப்பப்படாத புத்தகங்கள் எதுவாகினும் எக்காரணம் கொண்டும் அவை தேர்வுக்கு எடுத்துக் கொள்ளப்படாது.
மேலும் இது தொடர்பான தகவல்கள் மற்றும் சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ள:-
கார்த்திகேயன் - 9942633833
அருண் - 9790443979
கிருபா - 9940191177
மாரி – 9600348630
புத்தகங்களை அனுப்ப வேண்டிய முகவரி: -
வெ.கார்த்திகேயன்,
80, சுவாமிநாதன் இல்லம், (மூன்றாவது வீடு, தரைத்தளம்)
முதல் பிரதான சாலை,
ஸ்ரீ சத்ய சாய் நகர்,
மாடம்பாக்கம் பிரதான சாலை,
ராஜ கீழ்ப்பாக்கம்,
கிழக்கு தாம்பரம்,
சென்னை - 600073
தொடர்பு எண் - 9942633833