மெகஸ்தனிஸ் என்றொரு அயல்நாட்டுப்பயணி. இவர் இந்தியாவுக்கு வந்த சீனப் பயணிகள் யுவான் சுவாங், பாஹியான் வரிசையில் கிரேக்கத்தில் இருந்து இந்தியாவுக்கு வந்தவர். அலெக்ஸாண்டர் இந்தியா மீது படையெடுத்த போது கூட வந்து இங்கே சில காலம் தங்கிச் சென்றார். ‘இண்டிகா’ எனும் மாபெரும் அர்பணிப்பு இவருடைய படைப்பு தான்.
இந்த மெகஸ்தனிஸுக்கு திக்கு வாய் பிரச்சினை இருந்திருக்கிறது. அதற்கான நிவாரணமாக மெகஸ்தனிஸின் ஆசிரியர் அவரை ஆற்றில் கழுத்தளவு நீரில் நின்று கொண்டு வாய் நிறைய கூழாங் கற்களைப் போட்டுக் கொண்டு அதே நிலையில் நின்றவாறு உரக்கப் பேசிப்பழகச் சொல்லி இருக்கிறார். ஆசிரியர் சொன்னதை வேத வாக்காக எடுத்துக் கொண்டு பின்பற்றியதில் நாளடைவில் மெகஸ்தனிஸ்க்கு திக்கு வாய் பிரச்சினை குணமானதாம். அதுசரி அன்றெல்லாம் ஊரெங்கும், நாடெங்கும் ஆறுகள் செழிப்பாக இரு கரை நிரப்பி கடல் நோக்கிப் பாய்ந்து கொண்டிருந்தன. இப்போது ஆற்றுக்கு எங்கே போவதாம்? ஆறுகள் இருந்த இடத்தில் பெருஞ்சாக்கடைகளும், பல கிராமங்களில் வண்டித் தடங்களும் தான் காணக் கிடைக்கின்றன என்கிறீர்களா?
சரி திக்குவாய் பிரச்சினை குணமாக நம்மால் இப்போது செய்யக் கூடியதென்று ஏதாவது இருக்கும் தானே?!
இதோ வர்ம ஆசான் தலைமை மருத்துவர் டாக்டர்.எஸ்.ஆர். பாலாஜி சொல்வதைக் கேளுங்கள்;
திக்குவாய் பிரச்சினை என்பது உடல் நலனோடு மனநலமும் சேர்ந்த விசயம். அதாவது நமது உடல் உறுப்புகளுக்கும், மூளைக்கும் அருமையான ஒத்திசைவு இருப்பதால் தான் நம்மால் சரியான படி நடக்க முடிகிறது, பேச முடிகிறது, எழுத முடிகிறது. மூளை சொல்வதை உடலுறுப்புகள் சரியான படி கிரகித்துக் கொள்ளாத போது தான் திக்குவாய் உள்ளிட்ட பிரச்சினைகள் வருகின்றனவாம். இந்த ஒத்திசைவு வர என்ன செய்ய வேண்டும்?