நாவூறச் செய்யும் நெல்லிக்காய் சட்னி செய்வது எப்படி?

நெல்லிக்காயை கொட்டை நீக்கி, துண்டுகளாக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடானதும்
நாவூறச் செய்யும் நெல்லிக்காய் சட்னி செய்வது எப்படி?
Updated on
1 min read

தேவையான பொருள்கள்:

முழு நெல்லிக்காய் - 6 
உளுத்தம்பருப்பு - அரை கிண்ணம்
காய்ந்த மிளகாய் - 2
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
கொத்துமல்லித்தழை - ஒரு கைப்பிடியளவு (அலசி ஆய்ந்தது)
கடுகு - அரை தேக்கரண்டி
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

நெல்லிக்காயை கொட்டை நீக்கி, துண்டுகளாக்கிக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடானதும் உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்கவும்.

அதனுடன் நெல்லிக்காய், பெருங்காயத்தூள், உப்பு, கொத்துமல்லித்தழை சேர்த்து வதக்கி இறக்கவும்.

ஆறியதும் அதனுடன் தண்ணீர்விட்டு மிக்ஸியில் நைஸாக அரைத்தெடுக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்துச் சட்னியுடன் கலக்கவும். சுவையான நெல்லிக்காய் சட்னி ரெடி. இது சத்தானதும் கூட என சொல்லவும் வேண்டுமா!

குறிப்பு: நெல்லிக்காயை ஆவியில் வேகவைத்தும் அரைக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com