35 பந்துகளில் சதம். டி20 கிரிக்கெட்டில் அதிவேக சதமடித்த தென் ஆப்பிரிக்காவின் டேவிட் மில்லர் சாதனையை (35 பந்துகள்) ரோஹித் சமன் செய்துள்ளார். இந்திய வீரர்களில் இத்தகைய அதிவேக சதமடித்த ஒரே வீரர் ரோஹித் ஆவார்.
இலங்கைக்கு எதிரான 2-ஆவது டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியா 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 3 ஆட்டங்களைக் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது இந்தியா. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இலங்கை 17.2 ஓவர்களில் 172 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
முதலில், 23 பந்துகளில் 7 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் அரைசதம் எட்டினார் ரோஹித். தொடக்க வீரர்களான ரோஹித் - ராகுல் ஆகிய இருவரின் அதிரடி ஆட்டத்தால் 8.4 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது இந்தியா. 23 பந்துகளில் 7 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் அரைசதம் எட்டினார் ரோஹித். அதிரடி ஆட்டத்தால் 8.4 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது இந்தியா. அசத்தலாக ஆடிய ரோஹித் 35 பந்துகளில் 11 பவுண்டரிகள், 8 சிக்ஸர்களுடன் சதமடித்தார். 12.4-ஆவது ஓவரில் ரோஹித்-ராகுல் ஜோடி பிரிந்தது. சமீரா வீசிய அந்த ஓவரில் ரோஹித் ஆட்டமிழந்தார். 43 பந்துகளுக்கு 12 பவுண்டரிகள், 10 சிக்ஸர்களை சிதறடித்திருந்த அவர், 118 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தனஞ்ஜெயாவிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். முதல் விக்கெட்டுக்கு ரோஹித்-ராகுல் ஜோடி 185 ரன்கள் குவித்தது. இறுதியில், 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்து இந்தியா.
இந்த ஆட்டத்தில் இந்தியா எட்டிய 260 ரன்களே, டி20 ஆட்டத்தில் இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோர் ஆகும். அத்துடன் சர்வதேச அளவில் இது 2-ஆவது அதிக ஸ்கோர் ஆகும். முதலிடத்தில் ஆஸ்திரேலியா 263 ரன்களுடன் உள்ளது. ரோஹித்-ராகுல் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 185 ரன்கள் குவித்தது. டி20 கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிராக ஆடும் இந்திய அணியின் முதல் ஜோடி எட்டியுள்ள அதிகபட்ச ரன்கள் இதுவாகும். முன்னதாக, கடந்த ஆண்டு ராஞ்சியில் நடைபெற்ற ஆட்டத்தில் ரோஹித்-தவன் ஜோடி 75 ரன்கள் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது.